Sunday, October 31, 2010

கனவும்... வரமும்...


நேற்று நான்
கண்ட கனவுகளை
என்மனத்தின் ஆசையாய்
அறிந்துக்கொண்ட இறைவன்
நான்வேண்டும் வரமென
வேண்டாமலே எனக்களித்தான்
உடலையும் உள்ளத்தையும் - இன்று
நனைத்து குளிரச்செய்தான்.

கண்ணில்கண்ட கார்மேகம்
கண்களையும்யும் அகத்தினையும்!
தீண்டும் ஈரக்காற்று
தேகத்தையும் நுரையீரலையும்!!
மண்ணில்சேரும் மழைத்துளி
உடலையும் உள்ளத்தையும்!!!
அடையசெய்து என்னுள் - அளவற்ற
மகிழ்ச்சிபொங்க செய்தான்.

நேற்றுநீ அனுபவித்ததும்
இன்றுநான் அனுபவித்ததும்
ஒருதலையாய் என்றாலும்
மனதுக்கு இன்பமாய்...
என்மனத்தின் ஆசையை
இறைவனே அறியும்சமயம்
நீயறியாமலா போய்விடக்கூடும் - அன்பே
எந்தன் வாழ்வில்.

3 comments:

பால்ராஜ் said...

இனிமை !

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ERS,

தங்களின் இணைப்பிற்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பால்ராஜ்,

தங்களின் இனிய முதல் வரவிற்கும் இனிமையான பின்னூட்டத்திற்கும் மற்றும் என் இதயவயலிலும் அன்பெனும் பின்னூட்ட விதையினை விதைத்தமைக்கும் மிக்க நன்றி......