Sunday, June 28, 2009

காதல் வேதனை


அதிகாலையில்...
வந்துநின்றாள் ஆசையுடன் வாசலில்
காண வரும்வரை காத்திருந்தேன்
காண வந்தபின் காணாதிருந்தேன்
கோலமிட்டு சென்றாள் கோபத்துடன்.

காலையில்...
வந்துநின்றாள் மாடியில் தலைகுளித்து
உலர்த்தினாள் கொடியில் துணிதுவைத்து
பொருத்தினாள் பிடிப்பினை துணிகள் பறக்காமலிருக்க
பூத்தாள் சிரிப்பினை எனதுள்ளம் வாடாமலிருக்க.

பிற்பகலில்...
கண்களை சாய்த்தபடி பார்த்தேன்
கதவில் சாய்ந்தபடி நின்றிந்தாள்
நிமிர்ந்து சிந்தித்தபடி நின்றேன்
நலிந்து சிரித்தபடி நின்றாள்
கண்களை மூடிவிட்டு கண்டேன்
கதவினை மூடிவிட்டு காணாதிருந்தாள்.

மதியம்...
உறங்க சென்றாளோ என்னவோ
உறக்கம் இல்லாமல் வெளியேவந்தாள்
என்னை காணவந்தாளோ என்னவோ
என்னையும் காணாமல் உள்ளே சென்றாள்.

இரவில்
படுக்கையில் புரண்டும் பார்த்தாள்
தூக்கம் அப்பவும் வரவில்லை - இந்த
துக்கம் அவளுக்கு மட்டுமில்லை
எனக்கும் அவள்நினைவு அப்படிதான்...

இதயம்



இதயத்திற்குள் இதயம்
இங்குமட்டும் இல்லை - ஆம்
என்னவளின் இதயமும்
என்னுள்தான் இருக்கின்றது.



இதயத்திற்குள் ஓர் வெற்றிடம்
இங்குமட்டும் இல்லை வீற்றிப்பது
என்னுடைய இதயத்திலும்
என்றும்ஓர் வெற்றிடம் - அதுபோன்று

காதலிக்கும்முன்பு என்னெஞ்சில்
யாரோஒருவளுக்காக வெற்றிடம்
காதலித்தபின்பு என்னெஞ்சில்
யாரோஒருத்தியாள் வெற்றிடம்.