Monday, March 19, 2012

காத்திருப்போடு....


குடிக்கும் தண்ணீர் தேவையென்றால்
கிடைக்கும் இடம்தனை தேடிச்சென்று
இல்லாத தண்ணீருக்கு எந்தாயவளும்
இயன்றளவில் மணிக்கணக்கில் காத்திருந்து - எப்படியோ
தனியாக கொண்டு வந்திருப்பாள்...

பசி தீர்க்கும் கஞ்சியை
படி அளந்து கொடுக்கிறார்கள்
என்றோ வயிற்றில் சுமந்த
என்னையும் அவள் இடுப்பில் - சுமந்தபடி
இங்கே நீண்ட வரிசையில்...

Friday, March 16, 2012

நீயளிக்காத முத்தம்...



பெண்ணே!!!
உன் இதழ்களால்
என்னை தீண்டிடாதபோதும்..

வானமகள் எனக்கு
வாரியளித்த முத்தமோ?
மழையின் முதல்துளி
மண்ணில் விழும்முன்
என் மேனியில்
இன்று தொட்டது...

அதனால்..
உண்டாகும் உணர்வோ
உந்தன் முத்தங்கள்
கொடுக்கும் ஸ்பரிசத்தை
கொடுத்து மெல்ல
மயங்கவும் என்னை
மகிழவும் செய்கிறதடி...