Saturday, January 3, 2015

நிலாவின் வருகை....


சின்னஞ்சிறு வயதில்
சிலிர்க்கும் இரவில்
வீட்டின் முற்றத்தில்
கொடியில் உலரும்
ஆடைகளுக்குள் பின்னிருந்தும்
ஜன்னல் ஓரத்தில்
திரைச்சீலை ஊடகமாய்
கண்ணுக்குள் படர்ந்திட
வெண்ணிலவுக்கு சேலைக்கட்டியும்
இளஞ்சோலை அல்லாத
பூந்தொட்டியில் பூப்பறித்து
பூச்சரம் தொடுத்து
பின்னந்தலையில் சூட்டியும் - நான்
கனவுகளை கண்டேன்...

இளமையின் காலத்தில்
கனவுகளுக்கு முடிவேதுமில்லாமல்
வான்வெளியில் இரவினில்
உன்னோடு என்னையும்
மிதக்க செய்கிறாய்...
வயல்வெளியில் பகலினில்
என்னோடு கைப்பிடித்து
உலாவர செய்கிறாய்...

பட்டாடையல்ல உந்தன்
பட்டுமேனி கட்டியிருப்பது
புத்தாடையாக இருக்கவேண்டும்
பளீரென்ற வெண்ணிறத்தோடு
புத்தாண்டை சொல்லவந்தாய்
புத்துணர்ச்சி எனக்களித்தாய்....

மதியானவள் நிலா என்னவளோ
மனதின் கனவுகளே நினைவாக்கவோ
மங்கையாய் மண்ணில் பிறந்தாயோ? - இல்லை
மீண்டும் கண்ணில் தெரிந்தாயோ?

Sunday, January 20, 2013

சொர்க்கம் என்னருகில்...




அன்று…
தண்ணீர்த்தொட்டிக்குள் நீந்தும் மீனை
கண்ணாடியின் வெளிபுறத்தில் விரலால்
தொட்டுத்தொட்டு பார்த்து மகிழ்ந்தேன்.

இன்று…
தாயின்வயிற்றுக்குள் நீந்தும் உன்னை
கரங்களாலும் இதழாலும் முத்தமிட்டு
தீண்டித்தீண்டி பரவசத்தில் மிதக்கிறேன்.

Tuesday, July 17, 2012

என் கனவே…



என்னுயிரே!!!
எங்கு ஒளிந்து இருக்கிறாய்?
என்பது நன்றாக தெரியும்
என்னுடைய மனதுக்கு…
எனினும்
என்னுடைய கண்கள் காண
எப்பொழுது வருவாயென மட்டும்
எண்ணிக்கொண்டு நித்தம்…

Monday, July 16, 2012

இப்பொழுதெல்லாம்…



எந்தன்
கனவுகளிலும் கற்பனைகளிலும்
மலராய் மலர்கிறாய்நீ!!!
எந்தன்
கவிதைகளிலும் கண்ணிலும்
இத(ய)மாய் இருக்கிறாய்நீ!!!
எந்தன்
காதலியைவிட மண்ணில்
சுகமாய் சொர்க்கமாய்நீ!!!
எந்தன்
நினைவுகளில் நிழலாக - என்னுள்
உயிருக்கு உயிராகநீ...

Monday, March 19, 2012

காத்திருப்போடு....


குடிக்கும் தண்ணீர் தேவையென்றால்
கிடைக்கும் இடம்தனை தேடிச்சென்று
இல்லாத தண்ணீருக்கு எந்தாயவளும்
இயன்றளவில் மணிக்கணக்கில் காத்திருந்து - எப்படியோ
தனியாக கொண்டு வந்திருப்பாள்...

பசி தீர்க்கும் கஞ்சியை
படி அளந்து கொடுக்கிறார்கள்
என்றோ வயிற்றில் சுமந்த
என்னையும் அவள் இடுப்பில் - சுமந்தபடி
இங்கே நீண்ட வரிசையில்...

Friday, March 16, 2012

நீயளிக்காத முத்தம்...



பெண்ணே!!!
உன் இதழ்களால்
என்னை தீண்டிடாதபோதும்..

வானமகள் எனக்கு
வாரியளித்த முத்தமோ?
மழையின் முதல்துளி
மண்ணில் விழும்முன்
என் மேனியில்
இன்று தொட்டது...

அதனால்..
உண்டாகும் உணர்வோ
உந்தன் முத்தங்கள்
கொடுக்கும் ஸ்பரிசத்தை
கொடுத்து மெல்ல
மயங்கவும் என்னை
மகிழவும் செய்கிறதடி...

Thursday, February 9, 2012

அது...


அது!!!
இருள்படர்ந்த வானம்
துணையற்ற முழுநிலவு
கூரையில்லா மேல்தளம்
யாருமற்ற தனிமை
நிலவின் துணைத்தேடி
அவனது மனமும்பயணம்
திகட்டாத இன்பமாய்
நாசியினை தீண்டாமல்
மேனியை வருடிமெல்ல
மயக்கும் இயற்கைக்காற்று...

அது?
நிலவொளியின் குளுமையோ?
ராப்பொழுதின் தன்மையோ?
குளிர்காலத்தின் சிலிர்(ற)ப்போ
மரங்களின் தாலாட்டோ?
என்றே அமைதியாய்
வானம் பார்த்து
சிந்தித்து தனிமையை
மறந்திட்ட இடைவேளை....
காற்றோடு கலந்து
இசையாக வெளிவரும்
சங்கீதமாய் செல்போனில்
அவனுக்கான அழைப்பு....

அது
தனிமையை போக்க
வந்திட்ட ஒன்றோ?
தனிமையை உணர்த்த
வந்திட்ட ஒன்றோ?
அக்கணத்தில் விடைத்தெரியாத
ஒன்றாய் மனதுக்குள்...
ஒற்றை நொடியில்
எத்தனையோ சிந்தனைகள்
வியப்பான ஒன்றாய்
உண்மையான ஒன்றாய்...

அது தொடரும்.....

Wednesday, January 25, 2012

நீவேண்டுவது நானா?


வாழ்வில் சந்திக்கும்
தோல்விகள் போதுமென்று
தோள்சாய்ந்து மனமழுதிட
நீவேண்டுவது நானா?

உன்னைவிட கொடுமைகளை
சந்திப்போர் கோடியென்று
வார்த்தைகளால் ஆறுதல்சொல்லிட
நீவேண்டுவது நானா?

சோகமெல்லாம் மாறிப்போகும்
நடப்பதை எதிர்கொள்ளென
விரல்பிடித்து சொல்லிநடந்திட
நீவேண்டுவது நானா?

என்னைபோல் உனக்கு
எத்தனையோ நட்பிருந்தும்
அதுநானாக முடியாதென
நீவேண்டுவது நானா?

Monday, January 23, 2012

அன்பின் பரிமாணம்...


நாட்களை பொழுதுகளாக வகைபடுத்தி
சொன்னார்கள் முன்னோர்...
அன்பினை பொழுதுகளாக பிரித்தெடுத்து
சொல்லமுடிந்தது உன்னால்..

வேண்டும் என்றால் நெருங்கி
பழகும் தருணம்!
வேண்டாம் என்றால் விலகி
செல்லும் தருணமென்று...

அன்பினை பொழுதாக பிரித்தலில்
துளியும் வருத்தம் இல்லை...
மனதுக்குள் மகிழ்ச்சி வெள்ளம்தான்
ஏனெனில்
உள்ளம் கொண்ட அன்பினை
வெறும் பொழுதுபோக்கு தானென்று
சொல்லாமல் இருந்த வரையிலும்...

Friday, January 6, 2012

உன் வருகைக்காக...


நான் குறிப்பெடுக்கும்
வெள்ளை காகிதமும்
என் நூல்குறிப்புகளின்
அச்சிட்ட காகிதமும்

எதை பார்த்தாலும்
எதை படித்தாலும்
எனக்குள் வரிகளாக
உன்னை ஞாபகபடுத்துகிறதே...

எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...

உந்தன் பார்வை
ஒன்று கிடைக்காதா?
கவியென்று பலஎழுதிட
வாய்ப்பு கிடைக்காதா?
ஏங்கி தவிக்கிறேன் - உந்தன்
சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்...

Wednesday, January 4, 2012

அவளோடு நான்....




உதட்டுக்கும் தொண்டைக்கும் 
இடையில் சிக்கிதவிக்கும்
நாழிகையை போல்
எந்தன் மனது....

வானமே பூமிக்கு
இறங்கி வந்ததோ?
நிலவின் காதலனாய்
என்னை காண்பதற்கு...

வானத்தை சேலையாக
கட்டிவந்த சிலையே
ஆனந்தத்தை சோலையாக
கூட்டிவந்த மாலையே...

வானத்தில் நொடியில்
தோன்றி மறையும்
மின்னலாய் அல்லாது

என்றும் பிரியாது
சேர்ந்தே இருக்கும்
அன்றில் பறவையாய்

என்கூடவே நடக்கும்
காண்பவரை மயக்கும் 
அன்னமாய் வந்தாய்...

விண்ணில் தோன்றும்
மின்னல் எப்படியோ
மண்ணில் தோன்றியது
என்னோடு கலப்பதற்கு

கண்ணில் மட்டுமே 
காணகூடிய மின்னலே!
நானோ.. இன்று
உன்னுடனே பயணிக்கிறேன்..


ஆவலோடு கைபிடித்தேன்
ஆனந்ததோடு கட்டியணைத்தேன்
ஆதரவாய் தோள்சாய்ந்தேன்
ஆசையாய் இடைகிள்ளினேன்...

மோகத்தோடு முத்தமிட்டேன்
மனத்தோடு ஒன்றிணைந்தேன்
தாகத்தோடு விட்டுபிரிந்தேன்
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...

இறங்கிதானே நடந்தேன் 
மாடிபடியில் உன்னோடு
கிறங்கி போனதனாலோ 
மேலேறிகொண்டு உன்மையலில்

சொக்கிபோன உன்னழகில்
சொர்க்கத்தின் படியைகாணவோ
கண்மூடி காற்றில்
உன்னோடு பறந்துகொண்டு... 

Monday, January 2, 2012

மொபைல் சிணுங்கல்...


பெண்ணே!
இதுவரை அவன் தலையணைக்கு
அருகில் உறங்கிவந்த நான்
இப்பொழுது மஞ்சத்தில் அவன்
நெஞ்சத்தின் மீது பள்ளிக்கொண்டு...
எல்லாம் உன்னால்!!! உன்வருகையால்!!!
உன்னோடு போட்டிபோடும் எண்ணம்
எனக்குள் துளியும் இல்லை...
ஆனால் பொறாமையாக பெருமையுடன்
அவனின் அரவணைப்பில் இதமாக - எல்லாம்
நீயாக நீவரும்வரை நான்...

Saturday, December 31, 2011


பிறக்கும் புது வருடம் எங்கள் இருவருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியானதாக அமைவது போல் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக, நீங்கள் நினைக்கும் வண்ணம் அமைய இறைவனிடம் வேண்டி வாழ்த்துகிறேன்…
அன்புடன்,
மம்தா & வாசன்

Wednesday, December 28, 2011

சொல்லும் மலரும்...


பெண்ணே!
சூரியனை கண்டும்
நிலவினை கண்டும்
மொட்டு ஒன்று
மலராய் மலர்வதில்
பெரிதும் வியப்பில்லை....
ஆனால்
உந்தன் ஒரேயொரு
ஒற்றை சொல்லில்
பலபூக்கள் பூக்கின்றன
என்னுள் கவிதையாக...
ஒவ்வொரு சிந்திப்பிலும்
இதழ்கள்கூட பூக்களாய் - உருமாறி
வியக்க வைத்துக்கொண்டு.

Wednesday, December 14, 2011

அமாவாசையும்... பெளர்ணமியும்...



யாரும் என்னைவிட்டு பிரிந்து
செல்லவுமில்ல்லை...
வாழ்க்கையில் எனக்கு காதல்
தோல்வியுமில்லை....
ஆனாலும் ஏனோ தேய்ந்து
போகிறேன்...
ஒருநாள் ஏனென்று புரியாது
மறைகிறேன்...

யாரும் என்னை உற்சாகமாக
ஆதரிக்கவுமில்லை...
எதன்மீதும் எனக்கு துளியும்
ஆசையுமில்லை...
இருந்தாலும் வானில்மெல்ல முழுதாக
வளர்கிறேன்...
பிறர் ரசிக்கும்வகையில் பிரகாசமாக
உதிக்கிறேன்...

Tuesday, December 6, 2011

அவளின் நிர்வாணமும்... அந்த நீலவானமும்... (2)


உடை!!! ஆபரணம்!!! அங்கம்!!!
எண்ணம் என்றுபல வனப்புகள்
ததும்பிய எந்தன்உயிர்  கனவே
நீயும்தான்  எனக்கு விருந்தாய்....

மேனியில்  இவையாவும் ஒன்றுசேர
பலகோலங்கள் பூண்டும் என்னையும்
என்கைகளையும் கட்டியும் போடுகின்றாய்
எண்ணங்களை மட்டும்பறக்க செய்கிறாய்...

பலவண்ணமும் பலவடிவமும் கொண்ட
மேகம்போல உன்னாடைகள் ஒவ்வொன்றும்
புதுவர்ணமும் புதுஉருவமும் கொடுத்து
புத்துணர்ச்சியை எனக்கு தந்துக்கொண்டு...

வெவ்வேறு அளவும் வெவ்வேறு
தன்மையும் கொண்டு மின்னும்
நட்சத்திரமாய் உந்தன் ஆபரணங்கள்
மகிழ்ச்சியை எனக்கு கொடுத்துக்கொண்டு...

கண்கவரும் உடையும் ஜொலிக்கும்
தங்கநகையும் கனிமறைக்கும் இலைபோல்
அங்கத்தை மூடிமறைத்தாலும் மனத்துக்குள்
உணர்ச்சிகளை மெல்லபொங்க செய்துக்கொண்டு....

Friday, December 2, 2011

உங்கள் வாழ்த்தினை வேண்டி....

 அன்புள்ள அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் / உறவுகளுக்கும்,

உங்களுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துக்கொள்வதில் ஆனந்தமடைகிறேன்...

எனக்கும், பெங்களூரை சேர்ந்த மம்தா என்கிற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் செய்ய, வருகின்ற டிசம்பர் 4ம் தேதி ஞாயிற்றுகிழமை, காலை 11 மணி அளவில் பெங்களூரில் பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது.... உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்தையும் மற்றும் ஆசிர்வாதத்தையும் வேண்டி என்றென்றும் நான்......

(தனிப்பட்ட முறையில் யாரையும் அழைக்கவில்லை என்று வருத்தம் வேண்டாம்.. திருமணத்திற்கு அனைவரையும் கண்டிப்பாக அழைக்கிறேன்... இது எளிமையான முறையில் பெண் வீட்டில் நடைபெறுவதால் உங்கள் அனைவரையும் அழைக்கமுடியவில்லை என்னால்...)

Dear Friends,

I am so happy to share my feel................

My Engagement is fixed on 04-12-2011 at 11.00AM in Bangalore.....

Tuesday, November 29, 2011

வாழ்க்கை...



வாழ்க்கை ஒரு வியப்புகுறிதான்!
வியப்புகுறி போல்பலர் நிமிர்ந்து
நிற்க ஆசையில் முற்படுகிறார்கள்
ஆனால்
வினாகுறி போல்சிலர் குனிந்து - ஏனோ
நிற்க முடியாமல் வளைகிறார்கள்???

வாழ்க்கையில்,
ஒரேயொரு வியப்புகுறி வருகிறது
ஆனால்...
பல வினாகுறிகள் ஒன்றன்பின்
ஒன்றாய் தொற்றி உடன்வந்து - மனதில்
குழப்பத்தை மட்டும் பாவிக்கின்றது...

வினாக்களை கண்டு தொ(கு)லைந்துபோகாமல்
வியக்கும் வகையில் உயர்த்திக்கொள்ள
விருவிருப்பாக வாழ்க்கையென்னும் ஓடுகளத்தில் - பலரும்
விரைந்துசெல்ல ஆயுத்தபடுத்திக்கொண்டு அதில்நானும்...

Tuesday, November 22, 2011

அவளின் நிர்வாணமும்... அந்த நீலவானமும்... (1)



விண்ணில் இருக்கும் வானம்
பார்த்து கண் மயங்காதோர்?
மண்ணில் உண்டெனில் ஆச்சர்யம்தான்!!!
வஞ்சி உன்னை கண்டும்
நெஞ்சம் வாடோதோர் இங்கே
மண்ணில் உண்டெனில் ஆச்சர்யம்தான்!!!
வஞ்சியும் வானமும் கிட்டதட்ட
ன்றென கூட சொல்லலாம்!

மேகம்!!! நட்சத்திரம்!!! நிலவு!!!
வண்ணங்கள் என்றுபல விந்தைகள்
நிறைந்த எந்தன் இரவுவானமே
உனக்கும் அவள்தான் போட்டி...

வானில் இவைகளை கொண்டும்
லஜாலங்கள் செய்தும் என்னையும்
என்கண்களையும் கட்டியும் போடுகின்றாய்
பார்ப்பவர்களையும் வியக்க வைக்கிறாய்...

மேகம் மூடாத வானம்
நட்சத்திரம் நிறையாத வானம்
நிலவு இல்லாத வானம்
வண்ணங்கள் நிரம்பாத வானம்
இப்படி பலநிலைகள் இருந்தாலும்
எப்படியும் காணும் கண்களுக்கு
நீலவானமாய் ரசிக்க தெரிவதுபோல
அவளும் உனக்கு போட்டியாய்....

அவள் யாரும் இல்லை
எந்தன் காதல் தேவதைதான்
தொலைத்தூரத்தில் நீயிருந்து என்னை
மயக்கி சொக்க வைக்கிறாய்...
அவளோ நான் கண்மூட
என்முன் வந்து செல்கிறாள்...

Friday, November 18, 2011

மீண்டு(ம்) உயிர்வாழ்வேன்....



ன் இதயத்தின் ஓரத்தில்
ஒரு மூளையில் உனக்கெனவும்
சிறு இடம் ஒதுக்கிவைக்கிறேன்
ன்னை விட்டு நீயும்
சென்ற பின்னும் அப்பகுதியை
வெட்டி எறிந்தும் உயிர்வாழ
என்னை நானே மீண்டும்
எனக்குள் ஆயுத்த படுத்திக்கொள்கிறேன்.