கொண்ட காதலை
கவிதையாய் வடித்திட
கைகள் துடிக்கின்றது...
எழுதிடாமல் இருக்க
கைகளுக்கு விலங்கினை
பூட்டிட நினைக்கிறேன்...
அதனையும்மீறி எழுதுவதை
தடுக்க முடியாததால்
விரலினையே வெட்டிவிட
மனம் எண்ணுகிறது...
மீண்டும் ஒருமுறை
காதல் மலர்ந்தால்
உன்னை வர்ணித்து
எழுதிவிடாமல் போய்விடுமோ
என்று அஞ்சியே
செய்யாமல் போகிறேன்...
இருப்பினும் தற்போது
எழுதுவதை தடுக்க
என்கட்டை விரலினை
மடித்து கட்டிக்கொள்கிறேன்...
உன்மேனியை தீண்டிடாத
விரல்கள் என்றாலும்
காகிதத்தில் ஓவியமாய்
மீதியிருக்கும் நான்கு
விரல்களும் காதலை
சொல்லிக்கொண்டே இருக்கின்றது
அவ்வவ்வபோது என்னசெய்வேன்...