கற்பாறையில் உருகும் வெண்ணையாய் நீ
கண்பார்த்து துடிக்கும் உள்ளத்தோடு நான்
நான் கை இல்லாதவனும் அல்ல
நான் வாய் இல்லாதவனும் அல்ல - இருப்பினும்
உன்னை காக்க முடியாமல்...
கதவுக்கு பின்னால் நீ
கனவுக்கு பின்னால் நான்
நான் கவிஞனும் அல்ல
நான் கலைஞனும் அல்ல - இருப்பினும்
உன்னை சிந்தித்துக்கொண்டே...
காட்சிக்கு அப்பாற்பட்டு நீ
காதல் வயப்பட்டு நான்
நான் கதாநாயகனும் அல்ல
நான் கதாயாசிரியனும் அல்ல - இருப்பினும்
உன்னை எண்ணிக்கொண்டே...
காதல்பேசும் மனதோடு நீ
காமம்கொண்ட உணர்வோடு நானா?
நான் இராமனும் அல்ல
நான் இராவணனும் அல்ல - இருப்பினும்
உன்னை நினைத்துக்கொண்டே என்றென்றும்...