முகமெனும் தடாகத்தில் நீந்தும்
வாலைமீன்களோ உன்னிரு கண்கள்?
இல்லையில்லை!
வானமெனும் ஆகாயத்தில் மிதக்கும்
சூரியசந்திரனே உன்னிரு கண்கள்...
பவளத்தின் மையத்தில் கோர்த்திட்ட
முத்துகளோ உன் புன்சிரிப்பு?
இல்லையில்லை!
தாமரையின் இடையே மலர்ந்திட்ட
முல்லைபூவே உன் புன்சிரிப்பு...
ஆழ்கடலில் மறைந்திருக்கும் வெண்ணிற
சங்கோ உந்தன் கழுத்து?
இல்லையில்லை!
அணிகலன் பொலிவுறசூடும் மெல்லிய
மேடையே உந்தன் கழுத்து...
அங்கமெனும் தங்கத்தில் மிலிர்கின்ற
பொன்னாடையோ உந்தன் பட்டாடை?
இல்லையில்லை!
பகலவனின் பட்டொளியில் பூத்திட்ட
புத்தாடையே உந்தன் பட்டாடை...
கன்னியின் சிரிப்பில் மயங்காத
ஆடவனும் பூமியில் இருக்கலாம்!
ஆனால்!!
கள்ளமற்ற உன்சிரிப்பை ரசிக்காத
உள்ளம் இனிபிறக்கவும் வாய்ப்பில்லை!!!
வாழையடி வாழையென தழைத்து
மண்ணில் நூற்றாண்டுகள் வாழ
இல்லையில்லை!
தமிழ்போல் பல்லாண்டுகள் பூமிதனில்
சிறப்போடு நீடுழிவாழ வாழ்த்துக்கின்றேன்.