Saturday, December 31, 2011
Wednesday, December 28, 2011
Wednesday, December 14, 2011
அமாவாசையும்... பெளர்ணமியும்...
யாரும் என்னைவிட்டு பிரிந்து
செல்லவுமில்ல்லை...
வாழ்க்கையில் எனக்கு காதல்
தோல்வியுமில்லை....
ஆனாலும் ஏனோ தேய்ந்து
போகிறேன்...
ஒருநாள் ஏனென்று புரியாது
மறைகிறேன்...
யாரும் என்னை உற்சாகமாக
ஆதரிக்கவுமில்லை...
எதன்மீதும் எனக்கு துளியும்
ஆசையுமில்லை...
இருந்தாலும் வானில்மெல்ல முழுதாக
வளர்கிறேன்...
பிறர் ரசிக்கும்வகையில் பிரகாசமாக
உதிக்கிறேன்...
Tuesday, December 6, 2011
அவளின் நிர்வாணமும்... அந்த நீலவானமும்... (2)
உடை!!! ஆபரணம்!!! அங்கம்!!!
எண்ணம் என்றுபல வனப்புகள்
ததும்பிய எந்தன்உயிர் கனவே
நீயும்தான் எனக்கு விருந்தாய்....
மேனியில் இவையாவும் ஒன்றுசேர
பலகோலங்கள் பூண்டும் என்னையும்
என்கைகளையும் கட்டியும் போடுகின்றாய்
எண்ணங்களை மட்டும்பறக்க செய்கிறாய்...
பலவண்ணமும் பலவடிவமும் கொண்ட
மேகம்போல உன்னாடைகள் ஒவ்வொன்றும்
புதுவர்ணமும் புதுஉருவமும் கொடுத்து
புத்துணர்ச்சியை எனக்கு தந்துக்கொண்டு...
வெவ்வேறு அளவும் வெவ்வேறு
தன்மையும் கொண்டு மின்னும்
நட்சத்திரமாய் உந்தன் ஆபரணங்கள்
மகிழ்ச்சியை எனக்கு கொடுத்துக்கொண்டு...
கண்கவரும் உடையும் ஜொலிக்கும்
தங்கநகையும் கனிமறைக்கும் இலைபோல்
அங்கத்தை மூடிமறைத்தாலும் மனத்துக்குள்
உணர்ச்சிகளை மெல்லபொங்க செய்துக்கொண்டு....
Friday, December 2, 2011
உங்கள் வாழ்த்தினை வேண்டி....
அன்புள்ள அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் / உறவுகளுக்கும்,
உங்களுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துக்கொள்வதில் ஆனந்தமடைகிறேன்...
எனக்கும், பெங்களூரை சேர்ந்த மம்தா என்கிற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் செய்ய, வருகின்ற டிசம்பர் 4ம் தேதி ஞாயிற்றுகிழமை, காலை 11 மணி அளவில் பெங்களூரில் பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது.... உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்தையும் மற்றும் ஆசிர்வாதத்தையும் வேண்டி என்றென்றும் நான்......
(தனிப்பட்ட முறையில் யாரையும் அழைக்கவில்லை என்று வருத்தம் வேண்டாம்.. திருமணத்திற்கு அனைவரையும் கண்டிப்பாக அழைக்கிறேன்... இது எளிமையான முறையில் பெண் வீட்டில் நடைபெறுவதால் உங்கள் அனைவரையும் அழைக்கமுடியவில்லை என்னால்...)
Dear Friends,
I am so happy to share my feel................
My Engagement is fixed on 04-12-2011 at 11.00AM in Bangalore.....
உங்களுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துக்கொள்வதில் ஆனந்தமடைகிறேன்...
எனக்கும், பெங்களூரை சேர்ந்த மம்தா என்கிற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் செய்ய, வருகின்ற டிசம்பர் 4ம் தேதி ஞாயிற்றுகிழமை, காலை 11 மணி அளவில் பெங்களூரில் பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது.... உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்தையும் மற்றும் ஆசிர்வாதத்தையும் வேண்டி என்றென்றும் நான்......
(தனிப்பட்ட முறையில் யாரையும் அழைக்கவில்லை என்று வருத்தம் வேண்டாம்.. திருமணத்திற்கு அனைவரையும் கண்டிப்பாக அழைக்கிறேன்... இது எளிமையான முறையில் பெண் வீட்டில் நடைபெறுவதால் உங்கள் அனைவரையும் அழைக்கமுடியவில்லை என்னால்...)
Dear Friends,
I am so happy to share my feel................
My Engagement is fixed on 04-12-2011 at 11.00AM in Bangalore.....
Subscribe to:
Posts (Atom)