Sunday, July 5, 2009

பெண்ணே என்வாழ்வில்...


காற்றாய் வா...

நான் சுவாசித்து கொண்டே இருப்பதற்கு
என்னை தாக்கும் - புயலாய்
சூறாவளியாய் அல்ல.


நீராய் வா...

நான் பருகிட மற்றும் தீண்டிட
என்னை அழிக்கும் - மழையாய்
வெள்ளமாய் அல்ல.


நிலமாய் வா...

நான் தங்குவதற்கு நடப்பதற்கு
என்னை புதைக்கும் - பூகம்பமாய்
நிலநடுக்கமாய் அல்ல.


நெருப்பாய் வா...

நான் குளிர்காய்வதற்கு
என்னை பொசுக்கும் - காட்டுதீயாய்
எரிமலையாய் அல்ல.


வானமாக வா...

நான் ரசித்துகொண்டே இருப்பதற்கு
என்னை வியக்கும் - எரிகற்களாய்
விந்தையாய் அல்ல.


காதலியாய் வா...

நான் உன்னோடு வாழ்வதற்கு
எல்லா சீற்றம் தரும்
பஞ்சபூதமாக அல்லாது
எல்லாவற்றையும் தாங்கும்
பெண்ணாக நீ வா...