Friday, June 10, 2011

நண்பர் ஹாசிம் அவர்களுக்கு....


ஒரேகருவறையில் பிறக்கவில்லை
ஈகரையில் இணைந்தோம்
அக்கறையை பகிர்ந்தோம்
எக்கரையிலோ இருந்தபோதும்...

இலங்கையில் பிறந்த
இராமன் நீ
இந்தியாவில் பிறந்த
விபிஷ்ணன் நான்

மதம் வேறாக இருக்கலாம்...
மனம் ஒன்றுதான் நமக்குள்...
எம்மதமும் சம்மதம்
எண்ணம் நமக்குள்...

நித்தம் பேசாமல்
போனாலும் உன்னோடு
பாசம் இல்லாமல்
போகாது என்னோடு...

கடல்கடந்து வாழ்ந்தாலும்
என்வாசமும் சுவாசமும்
நம்மை அறியாமலே
கலந்திருக்கும் காற்றினில்...

வாழ்வதற்கு பணம் தேவை...
வாழ்வில் குணம் தேவை...
வாழ்க்கைக்கு ஓர்துணை தேவை...
வார்த்தையில் பலமுறை கூறியவனே...

வாழ்வில் உனக்காவது
மணம் முடித்துகொள்ள
நான் ஆசைபடுகிறேன் - அதற்கு
உன்வரவினை எண்ணி...

2 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

அன்பு நண்பனின் பாசம் வரிகளில் கலந்திடக்கண்டு ஆனந்தம் உற்றவனாக நட்பு என்ற உயரிய பந்தம் எம்மைப்பிணைத்து இதுநாள்வரை அன்பில் கலந்திடச்செய்தது சுக துக்கங்களை பரிமாறிடச்செய்தது எமது உன்னதமான நட்பில் என்றும் எம் வாழ்நாள் வரை பயணித்திட இறைவனை பிரார்த்திப்பதோடு உம் எதிர்கால சிறப்பிற்கும் என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
நன்றி நண்பா என்றும்
நேசமுடன் ஹாசிம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

மிக்க நன்றி தோழா...

உங்களின் அன்பான மறுமொழிக்கும், உன்னதமான வாழ்த்திற்கும்...

இன்று போல்
என்றும் இணைந்திருப்போம்...
அன்புடனும் நட்புடனும்...