Thursday, June 23, 2011

நான்... கண்களா? இமையா?


தோழியே!
உலகத்தை நீபார்க்க
உண்மையான நட்பாய்
உனக்கு ஆயிரம்
கண்கள் இருக்கலாம்...
அதில் நானுனக்கு
வலதுகண்ணோ? இடதுகண்ணோ?
தெரியாது? ஒருவேளை
எத்தனை கண்கள்
இருந்தாலும் அத்தனை
கண்களை காத்திடும்
இமையாகவே எந்நாளும்
இருக்க ஆசைப்படுகிறேன்...

7 comments:

vetha (kovaikkavi) said...

good vaasan. Protected mind...
Best wishes.
Vetha. Elangathilakam.
http:// kovaikkavi.wordpress.com

Rathnavel Natarajan said...

எத்தனை கண்கள்
இருந்தாலும் அத்தனை
கண்களை காத்திடும்
இமையாகவே எந்நாளும்
இருக்க ஆசைப்படுகிறேன்...



நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Ranioye said...

கண்ணாகவும் அல்ல
இமையாகவும் அல்ல
கண்ணின் கருமணியாக
இருக்கிறாயடா கள்வா...!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேதா,

மிக்க நன்றி...

அன்பால் அனைவரையும் காக்க நினைப்பதில் தவறில்லையே...

போட்டி இருக்கலாம்... பொறாமை மட்டும் இருக்க கூடாது அல்லவா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வருகைக்கும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி...

சந்தோஷம் தானே...

நான் காணும் பொருள் யாவும் நீங்களும் காணலாம்...

shanthi said...

enakku oru imai.....wow..