Sunday, July 17, 2011

என்விழிகள் மூடிக்கொண்டு


படுக்கைக்கு அருகினில்
அலைபேசி வைத்து
தூங்கினால் கூட
உடல்நலத்திற்கு கேடாம்...

அப்படியிருக்க...
படுக்கும்முன் உன்னோடு
மணிகணக்கில் பேசுகிறேன்...
என்னிதயத்தின் மீதே
அலைபேசியை அணைத்து
நித்தம் துயில்கொள்கிறேன்
எப்படி சாத்தியமோ?
நீதராத வெப்பத்தையும்
அலைபேசி தருவதனாலா?
இல்லை..
அலைபேசியின் கதிர்வீச்சும்
அதனில் பதிவுசெய்யபட்ட
உன்குரலும் தாலாட்டாய்
என்னை சேர்வதனாலா?
என்விழிகள் மூடிக்கொண்டு...

6 comments:

ஆர்வா said...

அருமையாய் இருக்கு வாசன்.. எங்கதான் பேசினாலும் பெட்ல படுத்துக்கிட்டே பேசுறதே ஒரு தனி சுகம் தான் இல்ல.. ஹி..ஹி..

அம்பாளடியாள் said...

பார்த்தேன் இரசித்தேன் நல்ல படைப்பு.
பகிர்வுக்கு மிக்க நன்றி...
எனது முதற்ப்பாடல் என் வலைத்தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.உங்கள் பொன்னான
கருத்துகளையும் வாழ்த்துக்களையும் மிகவும் பணிவன்போடு எதிர்பார்க்கின்றேன்.வாருங்கள்
உங்கள் வரவுக்காக காத்திருக்கின்றேன் என்றும் அன்புடன் உங்களுள் ஒருத்தியாக இந்த அம்பாளடியாள்.

ezhilan said...

நல்ல கவிதை நண்பரே.'தீராதவெப்பத்தையும் அலைபெசி தருவதாலா?'.அனுபவ பூர்வமான வரிகள்.வாழ்த்துக்கள்.எழிலன்

ezhilan said...

நல்ல கவிதை நண்பரே.'தீராதவெப்பத்தையும் அலைபெசி தருவதாலா?'.அனுபவ பூர்வமான வரிகள்.வாழ்த்துக்கள்.எழிலன்

vetha (kovaikkavi) said...

அலைபேசியின் கதிர்வீச்சும்
அதனில் பதிவுசெய்யபட்ட
உன்குரலும் தாலாட்டாய்........
this is the secret...ha....ha....
Vetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

shanthi said...

ungal unarvu therigirathu ...vaasan sir..migaVUM ARUMAI..vaazthukkal