Thursday, February 9, 2012

அது...


அது!!!
இருள்படர்ந்த வானம்
துணையற்ற முழுநிலவு
கூரையில்லா மேல்தளம்
யாருமற்ற தனிமை
நிலவின் துணைத்தேடி
அவனது மனமும்பயணம்
திகட்டாத இன்பமாய்
நாசியினை தீண்டாமல்
மேனியை வருடிமெல்ல
மயக்கும் இயற்கைக்காற்று...

அது?
நிலவொளியின் குளுமையோ?
ராப்பொழுதின் தன்மையோ?
குளிர்காலத்தின் சிலிர்(ற)ப்போ
மரங்களின் தாலாட்டோ?
என்றே அமைதியாய்
வானம் பார்த்து
சிந்தித்து தனிமையை
மறந்திட்ட இடைவேளை....
காற்றோடு கலந்து
இசையாக வெளிவரும்
சங்கீதமாய் செல்போனில்
அவனுக்கான அழைப்பு....

அது
தனிமையை போக்க
வந்திட்ட ஒன்றோ?
தனிமையை உணர்த்த
வந்திட்ட ஒன்றோ?
அக்கணத்தில் விடைத்தெரியாத
ஒன்றாய் மனதுக்குள்...
ஒற்றை நொடியில்
எத்தனையோ சிந்தனைகள்
வியப்பான ஒன்றாய்
உண்மையான ஒன்றாய்...

அது தொடரும்.....

11 comments:

nithubaby said...

//வானம் பார்த்து
சிந்தித்து தனிமையை
மறந்திட்ட இடைவேளை....//

அருமையான சிந்தனை.....

//அது
தனிமையை போக்க
வந்திட்ட ஒன்றோ?
தனிமையை உணர்த்த
வந்திட்ட ஒன்றோ?
அக்கணத்தில் விடைத்தெரியாத
ஒன்றாய் மனதுக்குள்...அது
தனிமையை போக்க
வந்திட்ட ஒன்றோ?
தனிமையை உணர்த்த
வந்திட்ட ஒன்றோ?
அக்கணத்தில் விடைத்தெரியாத
ஒன்றாய் மனதுக்குள்...//

விடை கிடைக்காமல் நான்.... அருமையான வரிகள் வாசன்.....

Ranioye said...

thodar kathai onnu vara poguthu pola :)

வெற்றியாள் வேந்தன் said...

அருமை அருமை.

Marc said...

அருமை கவிதை வாழ்த்துகள்

Anonymous said...

இருள்படர்ந்த வானம்
துணையற்ற முழுநிலவு
கூரையில்லா மேல்தளம்
யாருமற்ற தனிமை
நிலவின் துணைத்தேடி

திகட்டாத இன்பமாய்
நாசியினை தீண்டாமல்
மேனியை வருடிமெல்ல
மயக்கும் இயற்கைக்காற்று...

நிலவொளியின் குளுமையோ?
ராப்பொழுதின் தன்மையோ?
குளிர்காலத்தின் சிலிர்(ற)ப்போ
மரங்களின் தாலாட்டோ?

MIGAVUM RASITHTHA VARIGAL, ARUMAI THOZHARE...PADIKKUM POTHU APPADIYE IYARKAYAI ANUBAVITHTHA UNARVU...MANAMAARNTHA PAARAADDUKKAL...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நித்யா,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி..

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்...

அது வரும் ஆனா... வராது...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரெத்னவேல்,

மிக்க நன்றி ஐயா..

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள விக்டர்,

மிக்க நன்றி தம்பி..

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தனசேகரன்,

மிக்க நன்றி தோழா..

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கீதா,

மிக்க நன்றி தோழி..

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்...

படித்து, அனுபவித்து உணர்வு பூர்வமாக பின்னூட்டமிட்டு பாராட்டியமைக்கும்...