Monday, March 19, 2012

காத்திருப்போடு....


குடிக்கும் தண்ணீர் தேவையென்றால்
கிடைக்கும் இடம்தனை தேடிச்சென்று
இல்லாத தண்ணீருக்கு எந்தாயவளும்
இயன்றளவில் மணிக்கணக்கில் காத்திருந்து - எப்படியோ
தனியாக கொண்டு வந்திருப்பாள்...

பசி தீர்க்கும் கஞ்சியை
படி அளந்து கொடுக்கிறார்கள்
என்றோ வயிற்றில் சுமந்த
என்னையும் அவள் இடுப்பில் - சுமந்தபடி
இங்கே நீண்ட வரிசையில்...

3 comments:

Marc said...

வறுமைக்கொடுமை மிகக்கொடுமை.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தனசேகரன்,

மிக்க நன்றி...

ஆமாம்.... மிகவும் கொடுமை தான்...

HBT said...

இதயத்தின் வலி, வயிறு பிசைதலின் உணர்வு