Thursday, September 3, 2009

தாகம் தீருமா?


இதயம் என்னும் கடலில்
நட்பு என்னும் தோணியில்
உலா வரும்வேளையில்
பிரிவு என்னும் பாறைதாக்கி
தோணி கவிழ்ந்து விடுமோ - என்று
அஞ்சி இறைவனை வேண்டிய என் நண்பா...

உயிர் பிரியும் நேரத்தைவிட
உறவுகள் பிரியும் நேரம் கொடுமையானது தான்...

பிரிவு என்பது மீண்டும் சேர்வதற்கே
பிரிவைகண்டு கலங்கிவிடாதே...

உறவு என்று சொல்ல
உனக்கு பலர் இருக்கலாம்
நண்பன் என்று சொல்ல - நானும்
ஒருவன் இருக்கின்றேன்
என்றும்என்னை மறந்துவிடாதே
உன்னைகாணும் பொழுதை எண்ணி...

0 comments: