Friday, July 15, 2011

பெளர்ணமி நிலவே!!! (2)


அழகு பெளர்ணமிநிலவே
நீவானத்திற்கு சொந்தம்...

நிரந்தரமாய் உன்னைகாண
நீவரும் வழியில்
நட்சத்திர பட்டாளங்கள்
நித்தம் காத்துகொண்டு...

மேககூட்டங்கள் கண்களைமூடி
உன்பாதம்நோக்கி தவழ்ந்துகொண்டு
உலகத்தின் ஒருமூலையிலிருந்து
மற்றொரு மூலையைநோக்கி

மனிதஉறவுகள் மனம்திறந்து
உன்முகம் பார்த்துரசித்து
வானத்தை ஏறேடுத்து
விழியில்கண்டு வியந்துகொண்டு...

நிலாப்பெண்ணே!
உனக்கும்தான் என்மீது
காதல்ஆசை வந்ததோ?
மண்ணில் தோன்றினாய்
ஆணாய் நிலைமாறினாய்
பட்டாம்பூச்சியாய் பறக்கின்றாய்...
என்னையே வட்டமிடுகின்றாய்.

ஆனால்..
பூவாய் நானும்
முற்றிலும் உருமாறினேன்...
உன்னை எனக்குள்
கவர்ந்து இழுத்தேன்..

என்ன ஓர்வியப்பு
வண்ணத்துபூச்சி மலரில்
தேனை குடிக்கவில்லை..
மலராகிய நானே
உன்னிடம் ருசித்துகொண்டு...

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

vidivelli said...

alakiya ,asaththalaana nilaavin kavithai....
vaalththukkal..

vetha (kovaikkavi) said...

நீவரும் வழியில்
நட்சத்திர பட்டாளங்கள்
நித்தம் காத்துகொண்டு...


mmmm arumai...
http://www.kovaikkavi.wordpress.com
Vetha.Elangathilakam.

shanthi said...

neengal nila pennukku sonthama?