Wednesday, July 20, 2011

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...


உலகில் எத்தனையோ
பூக்கள் வகையுண்டு...
அதுபோல்
எனக்கும் எவ்வளவோ
நட்பூக்கள் உண்டு

எல்லாமே ஒன்றுக்கொன்று
சற்றே வேறுபட்டு...
அதுபோல
எல்லாருமே ஒருவருக்கொருவர்
ஏதோ வித்தியாசபட்டு

ஒருசில பூக்களுக்கு
மட்டுமே தனிச்சிறப்புண்டு
அதுபோல
ஒருசில உறவுகள்
மட்டுமே கிடைப்பதுண்டு

அப்படியெனக்கு கிடைத்து
இன்று பிறந்தநாள்
கொண்டாடும் என்னுயிர்
தோழி உன்னைநான்
பல்லாண்டு வாழ்கயென
வாழ்த்துவதில் பெருமிதம்கொள்கிறேன்...

இன்று இதுவரை
இருக்கும் இன்பங்கள்
யாவும் பலநூறுபெருகி
கவலைகளெல்லாம் கரைந்தோடி
காணாமல்போக இறைவனை
கண்மூடி வேண்டுகிறேன்...

தோழி செளம்யாவிற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

6 comments:

Unknown said...

என் உயிர் நண்பா.. உன் வாழ்த்தினில் சற்று மயங்கித தான் போனேன் நான்... எப்போதும் வேண்டும் உன் நட்பு முப்போது வேண்டும் உன் அன்பு...

நன்றி சொல்லி மூன்றாம் மனிதனாக பிரித்து விட விருப்பம் இல்லை எனக்கு..

மிக்க மகிழ்ச்சி தோழா..!!

என்றும் என்றென்றும் இவள்..
நட்புடன் சௌம்யா..

சிசு said...

பிறந்தநாள் வாழ்த்துகள் தோழிக்கு...
பாராட்டுகள் தோழனுக்கு...

ரேவா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி

இராஜராஜேஸ்வரி said...

பல்லாண்டு வாழ்கயென
வாழ்த்துவதில் பெருமிதம்கொள்கிறேன்...

arasan said...

அன்பு வாழ்த்துக்கள் இரண்டு பேருக்குமே ...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்போடு தோழியை வாழ்த்திய அனைத்து அன்பான நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி...