Friday, October 7, 2011

உன்னால் என்பெயரும் கவிதைதான்...



உந்தன் பார்வையிலோ
உனக்கு என்றோ
ஓராயிரம் கவிதை
எழுத முடியாமல்போனாலும்
ஓராயிரம்முறை எழுதுகிறேன் - சிந்திக்காமல்
என்பெயரினை கவிதையென...

கடலில் பிறக்கும்
ஒவ்வொரு அலையும்
புதுவடிவத்துடன் இருப்பதுபோல்
ஒருவார்த்தை என்றாலும்
நீயழைக்கும் ஒவ்வொருமுறையும் - உன்னால்
கவிதையாகிறது என்பெயர்...

9 comments:

Ranioye said...

உனது பெயரையும் கவிதையாய் மாற்றும் அந்த அதிர்ஷ்டம் பெற்றவள் யாரோ???

நாவலந்தீவு said...

நீயழைக்கும் ஒவ்வொருமுறையும் - உன்னால்
கவிதையாகிறது என்பெயர்...//
சூப்பர்.

இராஜராஜேஸ்வரி said...

நீயழைக்கும் ஒவ்வொருமுறையும் - உன்னால்
கவிதையாகிறது என்பெயர்.

அழகான அழைப்பு! வாழ்த்துக்கள்!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி...

அதிர்ஷ்டம் நிறைந்தவள் அவளோ?
அதிர்ஷ்டம் நிறைந்தவன் அவனோ?
அதுயாரென்றும் எனக்கு தெரியாது
அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்...

வாசிக்கும் நொடியில்
சுவாசிப்புகூட மறந்துபோகிறது...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சதிஷ்,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முத்தரசு,

மிக்க நன்றி தோழரே...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

தங்களின் ரசனைக்கு...

arasan said...

அண்ணே ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் .
வாழ்த்துகள் கவிதைக்கு

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி தம்பி...

வாழ்த்து கவிதைக்கு மட்டும் தானா?

அண்ணனுக்கு கிடையாதா?...


அப்புறம்.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை... நம்பனும்... சரியா.