Friday, October 14, 2011

ஒதுக்கவில்லை.... ஒதுங்கிகொள்கிறேன்...


தோழியே!

உலகத்தில் எங்கோ வசித்தாலும்
உன்னாலும் நான் வாழ்கிறேன்
நீசொல்லி கேட்டிட ஆசைதான்...

ஆனால்

உன்னால் தான் அழுகிறேனென்று
நீமட்டுமல்ல இனியார் சொல்லியும்
கேட்கவே கூடாதென நினைக்கிறேன்...

அதனால்...

எனக்காகவும் நீ அழவேண்டாம்...
என்னாலும் நீ அழவேண்டாம்..
எந்நாளும் நீ அழவேண்டாம்...

8 comments:

SURYAJEEVA said...

சொல்லாடல் அருமையாக இருக்கிறது, துக்கப் பணிகளுக்கு ஒதுக்கும் மொழியை ஆக்கப் பணிக்கும் ஒதுக்கலாமே.. ஒரு பதிவு காதல் ஒரு பதிவு சமூகத்திற்கு என்று...

Rathnavel Natarajan said...

அருமை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சூர்யஜீவா,

மிக்க நன்றி தோழரே...

எனக்கும் ஆசைதான்... நிறைய எழுதனும் சமூகத்தை பற்றி... ஆனா எனக்கு எழுத கருத்து கிடைக்க மாட்டேங்குது....

ஏதாவது கருத்து சொல்லுங்க... அதைபற்றி எழுத முயற்சிக்கிறேன்... என்னை மாற்றிக்க பயிற்சி கொள்கிறேன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்,

மிக்க நன்றி ஐயா...

Ranioye said...

அருமை

MOHAMED BASITH said...

vunkalutaya kavithaikal yellam inimaiyaai irrukirathu,
vunkaluyaya adutha update's kaka
kaathirukkum
A.Mohamed Basith
neram irunthaal ennutaya websitai paarkka muyarchi seiyunkal(www.basith619.blogspot.com)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முகமது,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும் மற்றும் அழகிய பின்னூட்டத்திற்கும்....

பார்த்தேன் உங்கள் வலைத்தளத்தை மிகவும் அருமை....