Tuesday, December 6, 2011

அவளின் நிர்வாணமும்... அந்த நீலவானமும்... (2)


உடை!!! ஆபரணம்!!! அங்கம்!!!
எண்ணம் என்றுபல வனப்புகள்
ததும்பிய எந்தன்உயிர்  கனவே
நீயும்தான்  எனக்கு விருந்தாய்....

மேனியில்  இவையாவும் ஒன்றுசேர
பலகோலங்கள் பூண்டும் என்னையும்
என்கைகளையும் கட்டியும் போடுகின்றாய்
எண்ணங்களை மட்டும்பறக்க செய்கிறாய்...

பலவண்ணமும் பலவடிவமும் கொண்ட
மேகம்போல உன்னாடைகள் ஒவ்வொன்றும்
புதுவர்ணமும் புதுஉருவமும் கொடுத்து
புத்துணர்ச்சியை எனக்கு தந்துக்கொண்டு...

வெவ்வேறு அளவும் வெவ்வேறு
தன்மையும் கொண்டு மின்னும்
நட்சத்திரமாய் உந்தன் ஆபரணங்கள்
மகிழ்ச்சியை எனக்கு கொடுத்துக்கொண்டு...

கண்கவரும் உடையும் ஜொலிக்கும்
தங்கநகையும் கனிமறைக்கும் இலைபோல்
அங்கத்தை மூடிமறைத்தாலும் மனத்துக்குள்
உணர்ச்சிகளை மெல்லபொங்க செய்துக்கொண்டு....

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

வெவ்வேறு அளவும் வெவ்வேறு
தன்மையும் கொண்டு மின்னும்
நட்சத்திரமாய் உந்தன் ஆபரணங்கள்
மகிழ்ச்சியை எனக்கு கொடுத்துக்கொண்டு...


அழ்கான வரிகள்..

MOHAMED BASITH said...

super sir

Ranioye said...

அருமை