Wednesday, December 28, 2011

சொல்லும் மலரும்...


பெண்ணே!
சூரியனை கண்டும்
நிலவினை கண்டும்
மொட்டு ஒன்று
மலராய் மலர்வதில்
பெரிதும் வியப்பில்லை....
ஆனால்
உந்தன் ஒரேயொரு
ஒற்றை சொல்லில்
பலபூக்கள் பூக்கின்றன
என்னுள் கவிதையாக...
ஒவ்வொரு சிந்திப்பிலும்
இதழ்கள்கூட பூக்களாய் - உருமாறி
வியக்க வைத்துக்கொண்டு.

5 comments:

Ranioye said...

ஒவ்வொரு சிந்திப்பிலும்
இதழ்கள்கூட பூக்களாய் -// அருமை வாசன்

Unknown said...

பூக்களோடு பேசும் நண்பரின் வரிகள் அருமை .தொடருங்கள்

நாவலந்தீவு said...

கவிதை அருமை.
உங்கள் மனமும் மலரும் ஒன்றோ...
உங்களைப் போன்றே மென்மையாக இருக்கிறது.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

arasan said...

வணக்கம் அண்ணே ...
வரிகளில் வசந்தம் வீசுது ...
வாழ்த்துக்கள்