Wednesday, January 25, 2012

நீவேண்டுவது நானா?


வாழ்வில் சந்திக்கும்
தோல்விகள் போதுமென்று
தோள்சாய்ந்து மனமழுதிட
நீவேண்டுவது நானா?

உன்னைவிட கொடுமைகளை
சந்திப்போர் கோடியென்று
வார்த்தைகளால் ஆறுதல்சொல்லிட
நீவேண்டுவது நானா?

சோகமெல்லாம் மாறிப்போகும்
நடப்பதை எதிர்கொள்ளென
விரல்பிடித்து சொல்லிநடந்திட
நீவேண்டுவது நானா?

என்னைபோல் உனக்கு
எத்தனையோ நட்பிருந்தும்
அதுநானாக முடியாதென
நீவேண்டுவது நானா?

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

என்னைபோல் உனக்கு
எத்தனையோ நட்பிருந்தும்
அதுநானாக முடியாதென
நீவேண்டுவது நானா?

அருமையான வரிகள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

ad said...

இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம்.
ஆனாலும்,அருமை.

Anonymous said...

வாழ்வில் சந்திக்கும்
தோல்விகள் போதுமென்று
தோள்சாய்ந்து மனமழுதிட

உன்னைவிட கொடுமைகளை
சந்திப்போர் கோடியென்று
வார்த்தைகளால் ஆறுதல்சொல்லிட

சோகமெல்லாம் மாறிப்போகும்
நடப்பதை எதிர்கொள்ளென
விரல்பிடித்து சொல்லிநடந்திட

என்னைபோல் உனக்கு
எத்தனையோ நட்பிருந்தும்
அதுநானாக முடியாதென

நீவேண்டுவது நானா?

ARUMAI ARUMAI THOZHARE...IPPADI ORU UYIR NADPU ILLAYE THOZH SAAYA, ENDRU MIGAVUM EAKKATHTHAI KODUKKIRATHU UNGAL KAVI VARIGAL...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுவடுகள்,

மிக்க நன்றி..

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கீதா

மிக்க நன்றி..

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் கருத்திற்கும்...

உங்களுக்கும் ஓர் இனிய நல்லதொரு நட்பு கிடைக்கட்டும்... என் வாழ்த்துகள்..

நந்தினி மருதம் said...

கவிதை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

ஹிஷாலி said...

Suppar

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நந்தினி,
மிக்க நன்றி...
தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹிஷாலீ,
மிக்க நன்றி....
தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி...