Friday, April 1, 2011

நான் ஒரு முட்டாளுங்க...



தினம் தினம்
உந்தன் விழியாலும்
உந்தன் மொழியாலும்
என்னை புத்தியற்றவனாக
ஆக்குகின்றாய்...
இன்று ஏனோ?
புதிதாய் என்னை
மடையனாக மாற்றுவதுபோல்
முட்டாள்தின குறுஞ்செய்தியை
அனுப்புகின்றாயே?

4 comments:

கமலேஷ் said...

ரொம்ப நல்ல எதார்த்தமா இருக்கு வாசன்..

ஆனால் ஏன் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு பாடல் வரிகள் போன்ற தலைப்பாக வைக்கிறீர்கள்.

ஒரே வகையாக கவிதைகளில் பயன்படுத்தப்படும் உக்தி ... சில நேரங்களில் சுவையை குறைத்து விடக்கூடும்.

இதை நான் சொல்லலாம் இல்லையா..

Unknown said...

வரிகள் அழகு

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

மிக்க நன்றி நண்பா..

நிறைகளை சொல்வதை காட்டிலும்... குறைகளை சொல்வதில்தான் எனக்கு மகிழ்ச்சி...

அதுதான் என்னை சிறக்க வழிசெய்யும்... நீங்கள் கூறுவதற்கு முழு உரிமை உண்டு....

கண்டிப்பா மாற்றிக்கொள்கிறேன் நண்பா...

உங்கள் வரவே எனக்கு மகிழ்ச்சி... உங்கள் பின்னூட்டம் இன்னும் மகிழ்ச்சி...

இத்தகைய விமர்சனம் எல்லையற்ற மகிழ்ச்சி என் இதயத்திற்குள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிநேகிதி,

மிக்க நன்றி...

நலமா? நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சி