Monday, April 11, 2011

என்னுயிர் பிரியுதடி...

எந்தன் அலைபேசியில் புதிதாய்
எனக்குநீ அனுப்பும் குறுஞ்செய்திகளை
சேகரிக்க இயலாமல் முன்புநீ
என்றோ அனுப்பிய குறுஞ்செய்திகளை
ஒவ்வொன்றையும் நானாக நீக்கும்போது
என்மனதுக்குள் நடைப்பெறும் போராட்டத்தையும்
உயிர்விடுவதையும் எந்தவகையில் நீயறியக்கூடும் - நான்
வார்த்தையில் இவ்வாறு சொல்லாவிடின்...

அப்படியிருக்க பின்னெப்படி சாத்தியம்
எந்தன் உயிர்தோழியே உன்னை
என்மனதுக்குள் இருந்து நானாக
அகற்றிட நினைப்பது என்வாழ்வில்?
அகற்றிவிட நினைத்தாலும் என்னால் - ஒருவேளை
இம்மண்ணில் உயிர்வாழ முடியுமா?

4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

உருக்கம்...

MANO நாஞ்சில் மனோ said...

உணர்வுகளின் உருக்கம்னு சொல்ல வந்தேன்....

Unknown said...

நட்பிற்குள் பிரிவேது நண்பா...

அது என்றுமே முடிவுறா பந்தம்

தானே...

தடம் மாறிய யாத்ரீகன் said...

குறுஞ்செய்திகளை நீக்கவே மனமில்லை பின் காதலியை எப்படி பிரிவது!
எல்லோருக்கும் உண்டாகும் ஒருவித ஏக்கம் தான் இது!!! வரிகள் பிரமாதம்