Tuesday, August 2, 2011

சிறு வேண்டல்...


கண்ணே!
எந்தன் பேனாவும்
உன்னிடம் சேலையை
கடன் கேட்கிறது...

உன்னை பற்றி
எழுத அதனிடம்
மை தீர்ந்துவிட்டதாம்...

அழகே!
உந்தன் அழகினை
அழகாய் வர்ணிக்க
தடைகள் ஏதுமின்றி
நீயும் அள்ளித்தருவாயோ?

உன் சேலையால்
என்கவிதையை மெருகேற்று
உன் மொழியால்
என்னை பாராட்டு
உன் இதழால்
என்னை சீராட்டு
உன் பார்வையால்
என்னை உயிரூட்டு...

என்கவிதையும் நானும்
உன்னால் வாழ்ந்துபோகிறோம்..

7 comments:

இந்திரா said...

எழுதுறதுக்கு மை தானே வேணும்???
சேலை எதுக்கு??
உங்க பேனாவும் உங்கள மாதிரியே தான் இருக்கும் போலயே..
ம்ம்ம் என்னவோ போங்க.

குடந்தை அன்புமணி said...

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

ezhilan said...

'உன் மொழியால் என்னைப் பாராட்டு
உன் இதழால் என்னை சீராட்டு
உன் பார்வையால் என்னை உயிரூட்டு'
நன்றி தஞ்சையாரே. எழிலன்

shanthi said...

koduthal pochu......

shanthi said...

koduthal pochu.....athil magizhchi than..:)

vidivelli said...

அழகே!
உந்தன் அழகினை
அழகாய் வர்ணிக்க
தடைகள் ஏதுமின்றி
நீயும் அள்ளித்தருவாயோ?/

எல்லாமே உங்க கவிதையைக்கேட்டாலே அள்ளி அள்ளித்தரும்..
அழகான கவிதை சகோ/

நாவலந்தீவு said...

கவிதை அருமை நண்பா...