Thursday, April 22, 2010

தமிழும்... காதலியும்... -1

நான் ரசிக்கும் கடலும் கரையும் நீ!
நான் ருசிக்கும் காதலும் காமமும் நீ...

நான் வியக்கும் கிழக்கும் கிரகமும் நீ!
நான் மயங்கும் கீதமும் கீற்றும் நீ...

நான் கோடையில் தேடும் குற்றாலுமும் குடையும் நீ!
என் கண்ணில் தோன்றும் கூச்சமும் கூர்பார்வையும் நீ...

நான் கேட்கும் கெட்டிமேளமும் கெஞ்சலும் நீ!
என் தலைகவசமாய் கேசமும் கேடயுமும் நீ...

நான் கையில்கொள்ளும் கைக்கடிகாரமும் கைக்குட்டையும் நீ!!!

நான் விரும்பும் கொட்டாத மழையும் கொல்லாத வெயிலும் நீ!
நான் தரிசிக்கும் கோயிலும் கோபுரமும் நீ...

நான் வாழ்வில் அடையும் கெளரியும் கெளரவமும் நீ!!!

8 comments:

கவிதன் said...

//நான் ரசிக்கும் கடலும் கரையும் நீ!
நான் ருசிக்கும் காதலும் காமமும் நீ...//

rhyminga irukku..... very nice!

S.M.சபீர் said...

ரொம்ப அழகான ஆழமான வரிகள் நண்பா வாழ்த்துக்கள் இன்னும் தொடர....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

உங்கள் மனதினை போல் அழகான அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி...

உங்களின் ஊக்கத்திற்கு தலை வணங்குகின்றேன்...

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

அண்ணாமலை..!! said...

க,கா,கி...வரிசையிலா??.. தமிழில் புகுந்து
விளையாடுங்கள்!வாசன்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலையான்,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

ஏதாச்சும் புதுமையா பண்ணி பார்க்கலாம் என்று ஒரு முயற்சி...

எல்லாம் தங்களை போன்றவர்களின் உற்சாகம்தான் காரணம்...

நன்றி...