Friday, April 2, 2010

சேமிப்பு...

 


நண்பா!
இதயங்கள் செல்லரிப்பது
நேற்றைய எண்ணங்களால்…
சோகங்களை சேமிக்காதே
இன்பத்தின் புதைகுழிகள்…
நல்லதை(நினைவுகளை)  சேமித்துவை
நாளைய வழிகாட்டிகள் அவை…

இலட்சியம் இல்லாத இதயம்
வெறும் சதைகோலம்தான்...
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை
சிதறும்  குப்பைமேடுதான்...

கால்கள் தடைபட்டால்
வெறுப்பு மனதிற்கு மட்டும்தான்
பாதகமில்லை.
மனது தடைபட்டால்
இழப்பு வாழ்வுக்கும் சேர்த்துதான்
வசந்தமில்லை.

எனக்கு...
இன்றும் வசந்தகாலம்
இப்பொழுதும் உன்நினைவு
மனதில் எழுகையில்
மலர்கிறது கண்ணீர்…