Wednesday, April 14, 2010

சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்

இறைவா!

நித்தம் நிம்மதி நிறைந்த
நெஞ்சும் நித்திரையும்

முயற்சியும் முன்னேற்றமும் முடிவில்
முத்தான முத்திரையும்

சிரிப்பும் சிந்திப்பும் சிறந்த
சிங்கார சித்திரையாய்

வையகத்தில் வாழ்போருக்கு வழங்கிட
விழி(ரி)த்துடுயுன் விழித்திரையை...

இன்னருளை இணங்கிடு இவ்வுலகில்
இறைவேண்டி இனியவன்...

8 comments:

vaigarainila said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாசன்..
இந்த புத்தாண்டில் உங்களுடைய எல்லா ஆசைகளையும் இறைவன் நிறைவேற்றுவாராக..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

தங்களுக்கும் என் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள் மற்றும் உங்களின் எண்ணங்களும் வண்ணங்களாய் வாழ்வில் அமைந்திட என் வாழ்த்துகள்...

நன்றி...

Unknown said...

புதுவருட வாழ்த்துகள் வாசன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்.

நன்றி...

Aathira mullai said...

நித்தம் நிம்மதி நிறைந்த
நெஞ்சும் நித்திரையும்
முயற்சியும் முன்னேற்றமும் முடிவில் முத்தான முத்திரையும்
அன்பு வாசனுக்கு கிடைத்திட வேண்டிடும், வாழ்த்திடும் இப்புத்தாண்டில் என்மனம்.. அன்புடன்

தோழி said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இனிவரும் நாட்கள் அனைத்தும் வளமானதாகவும் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

சித்திரையின் முதல்நாளின் மகிழ்ச்சியை போன்று வாழ்வில் என்றென்றும் மகிழ்வுடன் வாழ்ந்திட இறைவன் விழித்திரையை விரி(ழி)த்து வழங்கிட வேண்டுகின்றேன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழி,

தங்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றி...

தங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தங்களின் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமைந்திட இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.