Monday, April 26, 2010

உன் பெயர்....

உன்னின் அழகான பெயரை
என்னவென்று தெரிந்திருந்தும்
உன்னிடம் மீண்டும் கேட்டது - நான்
என்னபேசுவதென்று தெரியாமலும்
எப்படிபேச துவங்குவதென்று தெரியாமலும்
மட்டுமில்லையடி என்னுயிரே...

நீ கொண்ட பெயரை
நான் கொண்டு அழைக்க
நீ படும் ஆனந்தமும்...
நீ கொண்ட பெயரை
நீயே உதட்டில் உச்சரிக்க
அதனை கேட்டு மனதுக்குள்
நான் அடையும் பேரானந்தமும்
எல்லையற்றதை நீ உணரவேண்டியே...

5 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

இது என் நண்பன் சபீர் என்னிடம் கேட்ட ஒர் கேள்விக்கு பதிலாய்...

கேள்வி: உங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டவுடன் அந்த பெண்ணுடன் முதலில் நீங்கள் பேச நினைப்பது?...

S.M.சபீர் said...

ஆஹா அருமையான பதில் கவிதையில்

உங்கள் ஆசையான கனவு நனவாக இறைவனை வேண்டுகிறேன் நண்பா

= YoYo = said...

\\நீ கொண்ட பெயரை
நான் கொண்டு அழைக்க
நீ படும் ஆனந்தமும்...\\

அருமையான வார்த்தைகள்
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
நன்றி

என்னோட கவிதைகளை பாருங்க
www.naankirukiyathu.blogspot.com

ஒரு விளம்பரம் தான்

Anonymous said...

நீ கொண்ட பெயரை
நீயே உதட்டில் உச்சரிக்க...


ஆம்...தனக்கு பிடித்தவர்கள் தன் பெயரேஆனாலும் ..அவர்கள் உச்சரித்ததையே தான் உச்சரித்துபார்ப்பது எப்படி கூப்பிட்டான்....இப்படித்தானே.....

என்னவெல்லாம் கற்ப்பனை பண்ணுகிறீர்கள்... am i correct....pon.

வைகறை நிலா said...

அழகான கவிதை..