Thursday, December 9, 2010

உன்பாதை மாறட்டும்... பயணம் தொடரட்டும்...



அழைத்தாய் வந்தேன் அருகினில்
அமர்ந்தேன் எங்கோ அழைத்துசென்றாய்
எளிதாக வரும்வழியில் சொல்லிவிட்டாய்...

உன்இலகுரக வாகனத்தில் மட்டுமல்ல
உன்இளகிய மனத்திலும் என்றாய்
நான் வீற்றிருப்பது என்பதனை...

என்இல்லம் மட்டுமல்ல அடைக்கப்பட்ட
சாலையில் அமைந்து இருப்பது
என்இதயம் சேர்த்துதான் அடைக்கப்பட்டு
சோகத்தில் உடைந்து போயிருப்பது...

வாகனத்தில் இங்கேயே இறங்கிக்கொள்கிறேன்
இதயத்திலும் இங்கேயே இறக்கிவிட்டுவிடு
உந்தன் வாகனத்திற்கு என்சாலையில் வழியில்லை
உந்தன் மனத்திற்கு என்சோகத்தில் பங்குயில்லை...

வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் என்னிடமிருக்கு
உன்னை மணக்க எண்ணம் எனக்கில்லை
இன்றே பாதையை மாற்றிக்கொள் இனி(தாய்) - உன்வாழ்வில்
என்றும் பயணம் தொடரட்டும் வெற்றியோடு...

0 comments: