Saturday, April 2, 2011

அழைப்புமணி...



உன்னை நான்
பெயர்சொல்லி அழைக்குபோது...
என்னை நீ
திரும்பிபார்க்காமல் அலட்சியம்செய்து
சென்றாலும்...
உன்பெயரை உச்சரித்ததை
உலகின் இன்பமாய்
மனதுக்குள் நினைப்பதை
போன்றே...
கைபேசியில் என்அழைப்பை
நீதீண்டாமல் போயிருந்தாலும்
உன்னைநான் அழைக்க
அழைப்புமணியாய்...
ஒலித்த உன்விருப்பமான
திரைப்பாடல் உன்குரல்
கேளாதகுறையை என்னுள்
தீர்க்குதடி...

5 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா இப்பிடியே பொலம்பிட்டே இருந்தா என்ன ஆகப்போகுது போயி காதலை மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்லுப்பா...


......கவிதை அருமை.......

இராஜராஜேஸ்வரி said...

interesting.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி...

சொல்லிவிடுவோம் விரைவில்.... அவள் மனது என்னவென்று தெரிந்துக்கொண்டு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும், ரசித்து மறுமொழி இட்டமைக்கும் மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள் ரவி,

மிக்க நன்றி...