Friday, April 8, 2011

சொல்லாத வார்த்தைகள்...

இவ்வுலகம் நிலவில்லாத வானமாய் 
இருண்டு நீண்டு போனதுபோல்...
உன்னுலகமும் கண்களும் கண்டிப்பாய்
இருண்டு தூங்காமல் போயிருக்ககூடும்...

உன்அலைபேசியும் என்குறுஞ்செய்திக்கு காத்திருந்து
உறக்கத்தை இழந்திருக்ககூடும்...
என்அலைபேசியும் என்மனமும் அனுப்பாது
இறந்துபோவதை நீயறிவாயோ?

என்மனதில் என்னவென்று நீயென
உன்னிடம் சொல்லிட எண்ணம்தான்
உன்மனதில் வண்ணத்தை படைத்தால்
என்மனம் தாங்கும் ஒருவேளை
பின்னத்தை கொடுத்தால் தாங்குமோ?

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.. அருமை..
வாழ்த்துக்கள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள செளந்தர்,

மிக்க நன்றி....

தங்களின் வரவிற்கும் மற்றும் பாராட்டிற்கும் மகிழ்ச்சி.

Anonymous said...

இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு..
என்ன வாசன்.. நலமா???

Anonymous said...

//உன்அலைபேசியும் என்குறுஞ்செய்திக்கு காத்திருந்து
உறக்கத்தை இழந்திருக்ககூடும்...
என்அலைபேசியும் என்மனமும் அனுப்பாது
இறந்துபோவதை நீயறிவாயோ?//


யதார்த்த வரிகள்..

Anonymous said...

//உன்மனதில் வண்ணத்தை படைத்தால்
என்மனம் தாங்கும் ஒருவேளை
பின்னத்தை கொடுத்தால் தாங்குமோ?//


பின்னம்??? அப்படியென்றால்????

nithubaby said...

நல்ல கவித்துளிகள் !
அருமை வாசன்