Thursday, April 14, 2011

இன்று போல் என்றும் இருக்குமா?


(அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...)

பிறந்திருக்கும் புத்தாண்டில் மனதுக்கு
பிடித்தவர்களோடு பேச நினைத்தாலே
உள்ளம்தானாக விண்ணில் பறக்கும்...

இருவரும் பேசும் சமயத்திலோ 
விண்ணும் இடிந்து விழுந்தாலும்
நெஞ்சம் அறியாமல் போகும்...

தொலைவில் இருந்தாலும் பேசும்
மொழிதனில் அகம் மகிழ்ந்து
அமிர்தமும் சுவையற்று போகும்...

பக்கத்தில் அமர்ந்து பாயசமுண்டு
புத்தாண்டை கழிப்பதை விடவும்
இதயத்திற்குள் சந்தோஷம் பொங்கும்...

உதட்டில் வார்த்தைகளாய் அல்லாது
உதிர்த்து விட்ட மெளனமல்லாத
மொ(மு)த்தபூவும் தேனாய் இனிக்கும்...

செவியில் உணர்ந்த உண(ர்)வு
உதிரத்தில் கலந்து உடல்முழுதும் - என்றென்றும்
பரவசம் அடைய செய்கிறது....

9 comments:

பனித்துளி சங்கர் said...

அருமை நண்பரே . இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நன்றி.. மற்றும் வாழ்த்துக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

lathasaravnan said...

nandru nanbarey

lathasaravnan said...

தொலைவில் இருந்தாலும் பேசும்
மொழிதனில் அகம் மகிழ்ந்து
அமிர்தமும் சுவையற்று போகும்...

உதட்டில் வார்த்தைகளாய் அல்லாது
உதிர்த்து விட்ட மெளனமல்லாத
மொ(மு)த்தபூவும் தேனாய் இனிக்கும்...

puthandirkku kathal rasam thanthu vitteerkal vasan
inipum kathalum nalla combination

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சங்கர்,

மிக்க நன்றி...

தங்களின் வாழ்த்தில் மகிழ்ச்சி அடைகிறேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள செளந்தர்,

மிக்க நன்றி...

தங்களின் வரவிற்கும் & வாழ்த்து கூறியமைக்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள லதா,

மிக்க நன்றி தோழி..

தங்களின் இனிய முதலாவது வருகைக்கும் வாழ்த்திற்கும்...

ரசத்தின் சுவையினை சுவைத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்....