Wednesday, April 20, 2011

தெரியாது... ஆனால்!!! இன்று...




இதயத்தில் பூத்துவிட்ட காதலின்
அடையாள சின்னமோ என்னவோ?
தெரியாது.... ஆனால்!!! இன்று...
நீயுமென்னை ரசிக்க வேண்டும்
என்பதற்காகவே பலமணி நேரம்
கண்ணாடியின் முன்பு என்னை - நானே
ரசிக்க தொடங்கிவிட்டேன் புதிதாய்...

நீசெல்லும் வழியில் பின்திரும்பி
எதற்காக பார்த்தாயோ என்னவோ
தெரியாது.... ஆனால்!!! இன்று...
நீயெனக்காவே திரும்பியிருக்க வேண்டும்
என்பதற்காகவே தினமும்வந்து நிற்கிறேன்
உன்பார்வை மீண்டும் ஒருமுறை - கிடைக்காதயென
காத்திருக்க துவங்கிவிட்டேன் புதிதாய்...

நாளை அடைந்திடும் முன்னேற்றத்திற்கு
பள்ளிதேர்வுகளை படித்தேனோ என்னவோ?
தெரியாது.... ஆனால்!!! இன்று
உன்னோடு பேசிமகிழ வேண்டும்
என்பதற்காகவே கவிதைகளையும் படிக்க
கணினியின் தேடலில் நானே - என்னை
மூழ்கடிக்க ஆரம்பித்துவிட்டேன் புதிதாய்...

புதிதாய் மலர்ந்த பருவமோ
காரணம் அதுவோ? என்னவோ?
தெரியாது.... ஆனால்!!! இன்று...
என்வாழ்வில் நீசெய்திட்ட மாயமோ
என்னுயிரில் எப்படியோ? எவ்வாறோ?
ஓவ்வொரு நிமிடமும் நான் - இவ்வுலகில்
உனக்காக பிறக்கின்றேன் புதிதாய்...

12 comments:

maniajith007 said...

அருமையான வரிகள் அழகான கவிதை ஜி

இராஜராஜேஸ்வரி said...

ஓவ்வொரு நிமிடமும் நான் - இவ்வுலகில்
உனக்காக பிறக்கின்றேன் புதிதாய்...//
வாழ்த்துக்கள்.

விஜய்கரன் பா said...

good .. keep writing vasan.

Suresh Eashwar said...

Srini, Keep Rocking Always... All the very best my dear friend....I'm proud being as your friend....

nithubaby said...

அனைத்து வரிகளையும் ரசித்து படித்தேன் ! அருமை வாசன்

இது போல் மேலும் பல படைப்புகள் படைக்க எனது வாழ்த்துக்கள் !

அன்பு தோழி நித்யா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஜி,

மிக்க நன்றி...

தங்களினி வரவே மகிழ்ச்சி... பின்னூட்டம் அளித்திருப்பது இன்னும் மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

தங்களின் வரவிற்கும் & வாழ்த்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள விஜய்,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஈஸ்வர்,

மிக்க நன்றி டா...

உன்னுடைய பின்னூட்டத்தை எதிர்பார்க்கவே இல்லை டா உண்மையிலேயே... ரொம்ப சந்தோஷமா இருக்குடா... கல்லூரி நினைவுகள் 13 ஆண்டுகள் கடந்திருந்தாலும் மனதுக்குள் வந்து போகின்றது...

நானும் உங்களில் ஒருவனாய் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி... நட்பு இறைவன் கொடுத்த வரம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நித்யா,

மிக்க நன்றி...

தங்களின் முதன் முதலான வருகைக்கு...

ரசித்து படித்து பின்னூட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி...

தங்களின் வாழ்த்து.. நல்வரவாகட்டும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரத்னாவேல்,

மிக்க நன்றி...

தங்களின் இனிதான் வரவிற்கும் வாழ்த்திற்கும்...

அம்பாளடியாள் said...

அழகான காதல்க் கவிதைகள் பூத்திருக்கும் வலைப்பூ
இதைப்பார்க்கும்போது நெஞ்சிலே ஒரு பூரிப்பு தினமும்
பூக்கட்டும் இங்கே செழிப்பு வாழ்த்துக்கள் நண்பரே!.......