Monday, April 25, 2011

என் காதல்...


பெண்ணே!!!
உன்மீது நான்கொண்ட அன்பினை
சொல்லிவிட எத்தனையோ வழியிருந்தும்
உன்னிடம் வார்த்தையால் நான்நேரில்
என்காதலை சொல்விட முடியாமல்...
ஊமையாய் என்னிதயம் வலிக்கின்றது
ஒருவேளை நான் ஊமையாக
பிறந்திருந்தாலும் உன்னை கண்டசமயம்
தைரியமாக கைஅசைவுகளில் சொல்லி
என்காதலுக்கு மறுமொழியாய் உன்னுடைய
கண்அசைவை பெற்றிருக்ககூடும் வாழ்வில்...
புரியாதமொழியில்கூட புரியவைக்க கூடும்காதலை
புரிந்தயென்னை நீபுரிந்துகொள்ளாமல் போவதேன்...


நன்றி:
என் நண்பர் சாய் அவர்களின் எண்ணத்திற்கு ஓர் சிறுவடிவம் இது...

11 comments:

isaianban said...

ம்... அதெல்லாம் அவங்களுக்கு எங்க பாஸ் புரிய போவுது.. சரி சரி விடுங்க பாஸ் விடுங்க....

ரேவா said...

புரியாதமொழியில்கூட புரியவைக்க கூடும்காதலை
புரிந்தயென்னை நீபுரிந்துகொள்ளாமல் போவதேன்...

நல்லா இருக்கு நண்பரே

அன்புடன் மலிக்கா said...

எம்மொழியையும் தனதாக்கும்
ஆற்றல் கொண்டது காதல்
அப்படித்தானே வாசன்..

நடக்கட்டும் நடக்கட்டும்.

Anonymous said...

புரிஞ்சுக்குறவங்களுக்கு புரியுற மாதிரி சொல்லலாம்.. புரியாதவங்களுக்கும் புரியுற மாதிரி சொல்லனும்.
புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்குறவங்கள நீங்க தான் புரிஞ்சுக்கனும். புரியாம புரியலேனு சொல்றவங்களுக்கும் புரிய வையுங்க.
புரியுதா புரியலையா???

ஏதோ என்னால முடிஞ்சது....

இராஜராஜேஸ்வரி said...

நம்பிக்கை மட்டும்தான்
என்னுள் நிலையாய்//
வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இசையன்பன்,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும்.... ஆறுதலான மொழிக்கும்....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரேவா,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும் மற்றும் ரசித்து பின்னூட்டம் இட்டமைக்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புடன் மலிக்கா,

மிக்க நன்றி சகோ...

நீண்ட நாட்களுக்கு பிறகான உங்களின் மறுமொழியை இங்கே காண்பதில்...

நம்மிடையே முகநூல் ஒன்றாய் இருப்பது மகிழ்ச்சி...

இங்கும் அங்கும் பின்னூட்டம் இட்டமைக்கு மகிழ்ச்சி...

காதல்.... அணுவையும் பிளக்கும் ஆற்றல் கொண்டது...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

புரியல... ஆனா புரியுது...

உங்களால் முடிஞ்சது ரொம்ப நல்லா இருக்கு... உங்கள் நேர்மையும் எனக்கு பிடிச்சிருக்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

தங்களின் வரவிற்கும் மற்றும் வாழ்த்திற்கும்...

nithubaby said...

அருமையான வரிகள் !
காதலுக்கு ஏது மொழி கண்பார்வை போதும் தான் !
ஆனால் அதை புரிந்து கொள்பவர்களுக்கு மட்டும் தான் ! காதலை பற்றி புரியாதவர்களுக்கு பார்வையால் மட்டும் அல்ல வார்த்தைகளால் கூட உணர்த்த முடியாது !