Saturday, April 30, 2011

என்னை தீண்டா முத்தம்...


பேசும்போது நீயெனக்கு
அளித்திட நினைத்து
பரிமாறி கொள்ளபடாத
முத்தங்களின் கணக்கை...

உரையாடி முடிந்தபின்
அலைபேசிக்கு மொத்தமாக
வாரிவாரி வழங்குகிறாய்..
எனக்கு கொடுத்திருந்தாலோ
ஒன்றினை மட்டும்தானே
கொடுத்து இருப்பாய்...
அலைபேசியை தீண்டும்
முத்தங்களின் எண்ணிக்கையோ
எல்லையற்று படருகிறது...

உந்தன் தீண்டாத
முத்தமும் என்னை
மெய்மறக்க செய்கிறதடி...

6 comments:

jay said...

எந்தன் தீண்டாத முத்தமும்
உனை மெய்மறக்கச் செய்தாலும்...!!
உளிக் கொண்டு தாக்கும்
உனது விழி பார்வையின்
தாகம் எனை தவிக்க வைக்கிறதே...!!

jay said...

அழகான சிந்தனை வாசன், வாழத்துக்கள்!

nithubaby said...

ஹ்ம்ம் அருமைதான் வாசன் !
உங்களது ஒவ்வொரு சிந்தனையின் படைப்பும் தனி சிறப்பாக உள்ளது ! மேலும் தொடர வாழ்த்தும் நெஞ்சம்

அன்புடன்
நித்யா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஜெயா,

மிக்க நன்றி...

வணக்கம்...

நான் யாரோ என்றிருந்தேன்... மறுமொழி கண்டவுடன் தான் நீங்கள் என்பதை அறிந்துக்கொண்டேன்...

மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவும் மற்றும் மறுமொழியும்...

உந்தன் தீண்டாத முத்தம்
எந்தன் மெய்மறக்க செய்கிறது...
எந்தன் கொல்லாத பார்வை
உந்தன் மனதைதவிக்க செய்கிறதோ?

சிற்பி!!!
உளிகொண்டு செதுக்க
சத்தம் வரும்..

நான்!!!
விழிகொண்டு பார்க்க
தாகம் வந்ததோ?

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நித்யா,

மிக்க நன்றி...

அருமையென எனதருமை தோழி சொல்ல கேட்டு சிந்தை மகிழ்கிறேன்...

தங்களின் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும்... மிக்க மகிழ்ச்சி...

அன்பு நெஞ்சத்திற்கு என் வணக்கம்...

Ranioye said...

arumai nanbare! anal pavam cellphone