Wednesday, May 18, 2011

நிலவின் நேசம்... அங்கே என் வாசம்...

நிலவின் ஒளியாக
என்னைவந்து சேருகிறாய்
உன்னாலே
நானும் என்வரிகளும்
புத்துயிர் பெறுகிறோம்
தென்றலாய் பிறக்கிறோம்.

என்னை நீகாண
நிலாவாய்  நித்தம்
வானிலும் என்மனதிலும்
உலா வருகின்றாய்
நான் உன்னை
கண்டு ரசித்திட...

உன்னை நான்காண
தென்றலாய் மாறி
பூக்களிலும் மேகத்திலும்
கலந்து காற்றாய்
வீசி வருகிறேன்
உன்னை தீண்டிட...

நிலவாய் என்னை
நோக்கி நீ
விண்ணிலிருந்து பயணிக்கிறாய்...
தென்றலாய் உன்னை
எதிர்நோக்கி நான்
மண்ணிலிருந்து பயணிக்கிறேன்...

1 comments:

Ranioye said...

வீசும் தென்றலில்...
நேசம் நெய்திட்டேன்..
நேர்த்தியாய் அதை உடுத்தி ..
நீல வானில் ...
நிலா மகள் ஊர்வலம்!!
வெள்ளி மீன்கள் ...
கொள்ளை அழகாய் ..
கொட்டி கிடக்குது ..
கோடி பூக்கள்...
கூடி நின்று ஆசிர்வாதம்!