Sunday, May 29, 2011

என்மடியில் பூத்த நிலா (பூ)....


பகல்பொழுது விடியும்வரை
என்விழிகள் விழித்திருக்கவில்லை
எந்தன்மடி மீதினில்நீ
தலைசாய்த்து இருந்தபோதும்
என்விழிகளும் என்னைமறந்து - தானாய்
ஏனோதுகில் கொள்ளதொடங்கியது...


சிலமணி நேரங்கள்
நம்முதடுகள் நம்முடைய
வாழ்வின் நிகழ்வுகளை
பகிர்ந்துகொண்டே இருக்க
என்உதடுகள் உன்நெற்றியில் - புள்ளியாய்
கோலம்போட தொடங்கியது...


இடக்கைவிரல்கள் இடையிடையே
உச்சம்தலை வரைகேசத்தை
நேசமாய் வருடிகொண்டிருக்க
வலக்கைவிரல்கள் உன்இடக்கை
விரல்களோடு பத்தாக - ஒன்றாய்
மெல்ல இணையதொடங்கியது...

இரவின் நிசப்தம்எங்கும்
நமக்குள்ளும் படரதொடங்கியது
அப்பொழுது புரியவில்லை
பின்புதான் அறியநேர்ந்தது
இணைந்தது நம்மிதழ்களும் - மென்மையாய்
நம்மையறியாமலே என்பதனை...

1 comments:

Ranioye said...

பஞ்சணை பல நூறு வெள்ளியில்..
இருந்தும்..
உன் நெஞ்சணையில் துயில் கொள்ள
ஏங்குதடா நெஞ்சம்...!!