Wednesday, August 24, 2011

ஆசைகள்.........




நான்
புத்தனா?
பித்தனா?

அடைய முடியாமல்
குழப்பங்களாய் கொண்டு
பித்தனாய் அலைகிறேன்...

அடைய முடியாதென்று
ஆராய்ந்து உணர்ந்து
புத்தனாய் பிறக்கிறேன்...

ஆனால்!
இறப்புகள் இல்லை
பிறப்புகள் மட்டும் - மீண்டும்
என்னுள் நிகழ்ந்துகொண்டே...

7 comments:

தினேஷ்குமார் said...

இன்னும் ஆழாக்கேட்டுப் பாருங்கள் உங்களுக்குள்ளே நிச்சயம் விடைகிடைக்கும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தினேஷ்,

மிக்க நன்றி தோழரே...

ம்.. நீங்கள் சொல்வது சரிதான்...

ஆழம் சென்றால் அழுகை மட்டுமே பல நேரங்களில் தோன்றுகிறது கிணற்றில் ஊறும் நீராய்...

ஆர்வா said...

நிறைய விளக்கங்கள் தேடவேண்டும்.. அருமையான கவிதை நண்பா

இராஜராஜேஸ்வரி said...

இறப்பில்லாத பிறப்பாய் ஆசைகள்.

அருமையான பகிர்வு.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்.

மிக்க நன்றி ஐயா...

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மணி,

தேடல் உள்ளவரை தானே வாழ்வு வளமானதாக இருக்கும்... தேடிகொண்டே இருப்போம்....

மிக்க நன்றி தோழா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி தோழி....


நம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே தோன்றும் பிறப்பு இறப்பு இல்லாமல் தோன்றுபவை ஆசைகள்...

தங்களின் மறுமொழிக்கும் மிக்க நன்றி...