Friday, August 26, 2011

பூவே உன் வாசம்.... வாசமே என் சுவாசம்...



வாடிய பின்பும்
வாசம்வீசும் மலராய்
விலகி சென்றபின்பும்
விரும்பி நிற்கிறேன்...

மலர்ந்து மயக்கிய மலர்களின்
இதழ்களும் காகிதமாய் மாறியது
வண்ணங்களும் உன்னை ஞாபகபடுத்த
அதனிலும் உன்பெயரை என்னிதழ்களால்
முத்தமிட்டு எழுதி ரசிக்கின்றேன் - உன்னால்
வாசமும் எந்தன் சுவாசமாகின்றது...

என்னருகிலோ என்னுடனோ
நீயில்லை என்றபோதும்
உயிர்வாழ்கிறேன் நொடிநொடியும்
உந்தன் நினைவுகளோடு...

5 comments:

arasan said...

காதல் வழிந்தோடுகிறது ..
வாழ்த்துக்கள் அண்ணே

arasan said...

என்னருகிலோ என்னுடனோ
நீயில்லை என்றபோதும்
உயிர்வாழ்கிறேன் நொடிநொடியும்
உந்தன் நினைவுகளோடு...//

உண்மையா .. நான் நம்பமாட்டேன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி தம்பி...

// காதல் வழிந்தோடுகிறது
வாழ்த்துக்கள் அண்ணே //

காதலை விழிதேடுகிறது
மகிழ்ச்சி வாழ்த்துகளுக்கு

// என்னருகிலோ என்னுடனோ
நீயில்லை என்றபோதும்
உயிர்வாழ்கிறேன் நொடிநொடியும்
உந்தன் நினைவுகளோடு...//

உண்மையா.. நான் நம்பமாட்டேன் //

அவள் நினைவாக இன்னொருத்தியுடன்.... இதை நம்புவீங்களே....

தினேஷ்குமார் said...

///வாடிய பின்பும்
வாசம்வீசும் மலராய்///

ஆழமான வரிகள் நண்பரே மிகவும் ரசித்தேன் ...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தினேஷ்குமார்,

மிக்க நன்றி நண்பா...

ரசித்து பாராட்டியமைக்கு...