Wednesday, August 31, 2011

இருப்பினும் நான்...



கற்பாறையில் உருகும் வெண்ணையாய் நீ
கண்பார்த்து துடிக்கும் உள்ளத்தோடு நான்
நான் கை இல்லாதவனும் அல்ல
நான் வாய் இல்லாதவனும் அல்ல - இருப்பினும்
உன்னை காக்க முடியாமல்...

கதவுக்கு பின்னால் நீ
கனவுக்கு பின்னால் நான்
நான் கவிஞனும் அல்ல
நான் கலைஞனும் அல்ல - இருப்பினும்
உன்னை சிந்தித்துக்கொண்டே...

காட்சிக்கு அப்பாற்பட்டு நீ
காதல் வயப்பட்டு நான்
நான் கதாநாயகனும் அல்ல
நான் கதாயாசிரியனும் அல்ல - இருப்பினும்
உன்னை எண்ணிக்கொண்டே...

காதல்பேசும் மனதோடு நீ
காமம்கொண்ட உணர்வோடு நானா?
நான் இராமனும் அல்ல
நான் இராவணனும் அல்ல - இருப்பினும்
உன்னை நினைத்துக்கொண்டே என்றென்றும்...

6 comments:

சென்னை பித்தன் said...

நன்று.

Unknown said...

சிற்பியின் சிலையென
செந்தமிழ் கலையென
அற்புதக் கவிதனை
ஆக்கினீர் நண்ப
சொற்சுவை கண்டேன்
சுவைத்திட உண்டேன்
கற்பனை அருமை
காட்டுதும் திறமை
நன்றி! நண்ப!

புலவர் சா இராமாநுசம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சந்திரா,

மிக்க நன்றி ஐயா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராமாநூசம்,

மிக்க நன்றி ஐயா...

பல சிற்பிகளுக்கு முன்வடிவம் நீங்கள்... உங்கள் சிந்தனையில் பூத்திட்ட கலையென தமிழ் கவிதைகள் பல... உங்கள் எழுத்தால் என்னையும் வாழ்த்தியதில் அகம் மகிழ்கிறேன்... உங்கள் வரிகளுக்கும் உங்களுக்கும் நன்றியாக என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...

கதம்ப உணர்வுகள் said...

எப்படி எல்லாம் தன்னை சொல்லிக்கொண்டாலும் நேசத்தில் மட்டும் குறைவே இல்லை....

அன்பு வாழ்த்துகள் அசத்தல் கவிதை வரிகளுக்கு வாசா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மஞ்சு அக்கா,

மிக்க நன்றி...

அன்பான வாழ்த்துக்கும் மற்றும் வருகைக்கும்...