Wednesday, April 7, 2010

உன்னின் குரல்...

என்றோ!
உன்னோடு பழக்கம் தோன்றும்முன்
உன்னை பார்த்த முதல் தினம்
உன்னிடம் கேட்ட முதல் கேள்வி
உன்னின் மெல்லிய குரலில் கூறிய
உந்தன் இனிமையான பெயராய் பதில்...
அதனை எத்தனைமுறை மனதுக்குள்
உச்சரித்து பார்த்து மகிழ்ந்திருப்பேன்...
இன்று அந்த உன்னத உணர்வை
ஓர்திரைபடத்தில் வசனத்தின் வரிகளாய்
கேட்டபோதும் உள்ளம் மகிழ்கின்றேன்...

இன்றும் என் நெஞ்சில் எங்கோ உன்னின் குரல்
ஓர்மூலையில் மெல்லிசையாய் ஒலித்துக்கொண்டே...

7 comments:

Aathira mullai said...

காதல் மனமா இது சாதல் வரை இருக்கும் ரணமா வாசன்... அருமை வாழ்த்துக்கள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

இரண்டும் தான்...

மனதிற்குள் சதா ரணம்... ஆனால் எனக்கு சாதாரணமாய் இன்றும்...

நன்றி ஆதிரா...

Unknown said...

பிரிந்தாலும் நினைவின் குரல்கள் மெளனங்களாய் கூச்சல் போடும் உங்கள் கவிதை அருமை வாசன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

மிக்க மகிழ்ச்சி தங்களின் வருகையும் மற்றும் வாழ்த்துகளை காணும் சமயம்...

நன்றி நண்பரே...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலையான்,

மிக்க நன்றி...

elamthenral said...

காதலின் வலி உங்களின் உள்ளத்தை சொல்கிறது.... மிகவும் அருமை..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

காதலின் வலியை அனைவரும் உணர்ந்தவர்கள்தான். அதனால்தான் என் உள்ளத்தில் உள்ளத்தை உங்களாலும் உணரமுடிந்தது எனக்கொள்கின்றேன்.

நன்றி...