Sunday, June 20, 2010

எண்ண(ன்ன) கனவோ?


போட்டியில் வென்று
பழம் பரிசுபெற
மயில் மீதேறி
உலகை சுற்றினான்
ஒருவன்...

அம்மையும் அப்பனும்
உலகமென சொல்லி
போட்டியில் வெற்றி
வாகை சூடினான்
மற்றொருவன்...

காதலை சொல்ல
உலகமே உனைசுற்ற..
நீயோ! உலகமென
என்னை சுற்றும் - கனவுடன்
நானொருவன்...

8 comments:

priyamudanprabu said...

காதலை சொல்ல
உலகமே உனைசுற்ற..
நீயோ! உலகமென
என்னை சுற்றும் - கனவுடன்
நானொருவன்...
.........

இது நல்லாயிருக்கு

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு வாசன்..
நடத்துங்க...

அண்ணாமலை..!! said...

வாசன்..
உங்க கற்பனை
ரொம்ப அருமை!
இந்தக் கவிதையில்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பிரபு,

தங்களின் வருகைக்கும் மற்றும் வரிகளின் வழியான எண்ணத்திற்கும் என் நன்றிகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

மிக்க நன்றியும் & மகிழ்ச்சியும்...

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க புது திருவிளையாடல்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

ஒருவிளையாடால்....
வெறும் விளையாட்டு...

மிக்க நன்றி...