Thursday, December 9, 2010

விட்டுவிலகிவிடு என்னை..


தினமும்
நீஅழைத்த மறுநொடியே
உன்னை அழைக்கிறேன்
நித்தம்
நீஅனுப்பும் அனைத்து
குறுஞ்செய்திக்கும் பதிலளிக்கிறேன்
இப்பொழுதே நானுனக்கு
அடிமையாகதான் இருக்கிறேன்..
ஆனால்
இந்த இரண்டையும்
நானாக செய்வதில்லை
என்கிற கோபமுட்டும்
உன்நெஞ்சில் இன்னும்
அதையும் நானேசெய்ய
ஆரம்பித்தால் ஆகிவிடுவேன்
பைத்தியமாய் உன்னால்...

2 comments:

Anonymous said...

//இப்பொழுதே நானுக்கு
அடிமையாகதான் இருக்கிறேன்..//

இந்த கோர்வை சற்று புரியவில்லை. விளக்கம் அளிக்க முடியுமா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

பிழையை திருத்தி விட்டேன்...