Sunday, December 19, 2010

அன்பின் மீது ஆசைதான்...


இதுவரை இருவரும் கண்டிராத
இடத்தில் உன்கைக்கோர்த்து பேசிடாத
புதுவிசயங்களை பேசிநடந்திட ஆசைதான்...

சிலநேரங்கள் உன்மடியினில் தலைசாய்த்தும்
சிலநேரங்கள் உன்தோள்மீது தலைசாய்ந்தும்
பொழுதுகளை பேசிகழித்திட ஆசைதான்...

அன்பின் வலிமையை காட்டிட
அன்பின் தன்மையை கூட்டிட
சிலதருணங்களில் முத்தம்தந்திட ஆசைதான்...

இன்றுமட்டுமல்ல என்றும் உன்னோடு
இருப்பேன் உனக்காக இருப்பேனென்று
சொல்லி கட்டியணைத்திட ஆசைதான்....

இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைதான்....

10 comments:

aavee said...

கவிதை நன்றாக இருந்தது!!

arasan said...

அண்ணே நல்ல கவி வரிகள் ...

கலக்கலா இருக்கு .. ம்ம்ம்ம் தொடருங்க உங்கள் பயணத்தை ///

Anonymous said...

ஆசை அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது..

“ஆசை தான்“னு இருக்கணுமே..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆவி,


மிக்க நன்றி...

தங்களின் இனிய பின்னூட்டத்திற்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,


மிக்க நன்றி தம்பி...

நல்லா இல்லனா... நல்ல இல்லனு சொல்லனும்.... எல்லாத்துக்கும் சூப்பர் சூப்பருனு சொல்லகூடாது...

அண்ணன் ஏமாந்து போவ்விடுவேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,


மிக்க நன்றி...

மன்னிக்கவும்....

திருத்தம் செய்து விடுகிறேன்...

Meena said...

அருமையான ஆழமான வரிகள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மீனா,

மிக்க நன்றி....

அன்பு ஆழம் அறியாது...அல்லவா?

KALAM SHAICK ABDUL KADER said...

காதல் சுவைதனைக் காணக் கிடைத்ததால்
சாதல் வரைக்கும் விரும்பு.


“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கதிர்,

மிக்க நன்றி...

தங்களின் முதல் முதலான வரவிற்கும் மற்றும் இனிய பின்னூட்டத்திற்கும்...

காதலுக்காக சாதலை பலர் விரும்பிக்கொண்டு... காதலை சாகும்வரை விரும்பாமலா போகும் இந்த நெஞ்சம்...