Friday, December 24, 2010

காதல் கடிதம் – தொடர்பதிவு அழைப்பு (இந்திராவிடமிருந்து)

என்னை தொடர்பதிவுக்கு அழைத்த என் இனிய தோழி இந்திராவிற்கும், என்னோடு இந்த தொடர்பதிவில் கலந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் மற்றும் இப்பதிவினை படிக்கவிருக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் முதற்கண் நன்றி கலந்த வணக்கம்.... (எல்லாம் ஒரு ஐஸ் தான்) யாரும் பதிவ படித்துவிட்டு என்மேல கோப படக்கூடாது என்பதற்குதான்.

நானும் பிளாக் வைத்திருக்கேன் என காட்ட நினைத்து ஆரம்பித்த இந்த வலைபூவில் ஏதோ அப்பப்ப என் மனசுல தோன்றத / ஓடுறத வார்த்தையா இணைத்து வரிகளாக எழுத ஆரம்பித்ததுதான் இது.... (உனக்கு இது தேவையா அல்லது எங்களுக்கு இது தேவையானு மனதில் கேட்பது காதில் விழுகிறது) என்ன பண்ணுவது பத்துவரிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது நம் அரசியாரின் கட்டளை ஆயிற்றே... இப்படி ஏதாவது எழுதிதான் பத்துவரியை காட்ட முடியும்... அப்பதானே நம் அரசியார் மனம் மகிழ்வார். (ஏற்கனவே அவர்களிடம் மொக்கை சாமினு பேரு எடுத்து இருக்கிறேன்...) அது யாருக்கும் வெளியில் தெரியாத விசயம். இப்ப தெரிஞ்சு போச்சுனு யாரும் சந்தோஷ படவும்வேண்டாம்.
 
அது இருக்கட்டும்.... என்ன கொடுமை பாருங்க இந்தம்மாவ யாரும் தொடர்பதிவுக்கு கூப்பிடலனு நம்மை வம்புல மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்க ஆசையுடன்.... ( நம்மையும் வேற யாரும் இதுவரை கூப்பிடல என்பது வேற விசயம்). திரும்ப பழிவாங்காம விட்டுவிடுவோமா என்ன? 

சரி சரி... விசயத்துக்கு வருவோம்... இப்படியெல்லாம் நிறைய பதிவுகளை எழுத நினைத்தாலும் இதுவரை எழுதியது இல்லை... இனிமே முயற்சி செய்து பார்ப்போமே என்றுதான் இது.. இதுக்கு வரும் ஆதரவை பொருத்துதான்...(இதுவே எங்களால் தாங்க முடியல ... இனி தொடர்ந்தா? ஆளை விடுங்க ஐயா என்று புலம்புவது புரியுது) இது எல்லாம் அரசியலில் சாத(சதா)ரணம் அப்பா...

ஹலோ மேடம். எங்களை என்ன? அந்நியன் படத்தில் வரும் அம்பினு நினைச்சு கிட்டிங்களா? எங்க லவ்வருக்கு எழுதுறத உங்ககிட்ட காட்ட....

இது என் சார்பில் என்னுடைய காகிதமே எழுதிய பழைய காதல் கடிதம் ஒருமுறை சும்மா படிச்சி பாருங்க (எப்புடி இப்படியெல்லாமுனு யோசிகிறீங்க....) எதுவாயினும் பேசி தீர்த்துக்கொள்வோம்... பின்னூட்டத்தின் வழியே.... (அவசரபட்டு இனி இந்த பிளாக் வரவே கூடாதுனு நினைக்க மட்டும் கூடாது...) அப்புறம் நானும் அழுதுடுவேன்....

ஸ்டார்ட் மியூசிக்...


// கண்மணி அன்போடு காதலன் நான் நான்
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது ///

ஆரம்பம் மட்டும்தான் தடங்கல்.. அப்புறம் பின்னி பெடல் எடுப்போம்..... அதனால் இத மட்டும் அப்படியே காப்பி பண்ணி போட்டுகிறேன்


அன்பே!
// ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி//

- என்று நேரில் சொல்லமுடியாத காதலை கடிதத்தில் சொல்லிட்டோமில....

ஆருயிரே!
// நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?//

- என்று உன்னிடம் பதிலை கடிதத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்... (அடி வாங்காமால் தப்பிக்கதான்)

கண்ணே!
// கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை//

என்று உன்வருகைக்காக தினமும் வாடுகிறேன்.... (மூக்கு துடைத்து துடைத்து கைக்குட்டை நாறி போச்சு.. அதனாலதான் தொட மனசு வரல) 

காதலியே!
// காதல் கடிதம் தீட்டவே மேகமெல்லாம் காகிதம்....
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்...//

- என்று உன்னோடு கவிபாட ஆசையாய் ஏங்குகிறேன்... ( எழுத படிக்க தெரியாது அதனால தான் இதெல்லாம் முதலில் கேட்கிறோம்) கொண்டு வந்தா எழுதுவோம்....

// காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இது காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இதம் மாறும் இளமை பரிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்//

- என்று காதலை காலம் முழுதும் உன்னோடு சுமந்திட எண்ணிகொண்டு.... ( எழுதிய எழுத்துகளை உச்சரித்தது உதடு, கடிதத்தை ஒட்ட பயன்படுத்தியது உதடு அதனால தான் அடுத்த உதவியை அங்கிருந்து பெற்றுக்கொண்டு...)


அப்பாடா ஒரு வழிய எப்படியோ பெருசா மொக்கையை போட்டாச்சு... (மனசுல அப்படி ஓர் நினைப்பு... ஏன்னா... இது நமக்கு புதுசு....) நானும் ஊருக்கு போறேன் ( சனி , ஞாயிறு மற்றும் திங்கள்)... எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டி இருக்கு... உங்க மனசுல இருக்கும் எல்லாத்தையும் கொட்டி தீர்த்து விடுங்க நான் இல்லாத பொழுதே....




இது சும்மா இப்ப என்மனதில் ஓடியது....


கண்ணம்மா....
எனக்குள் வரிகள்வராமல் போய்விடுகின்றன
உன்னைகாணும் பொழுதினில் மட்டுமல்ல
உன்னை எண்ணும் பொழுதினிலும் - அந்நொடியிலும்
உன்முகத்தை தவிரவேறொன்றும் தோன்றாமல்....

அன்று...
காதல் சிறையென்று தெரிந்திருந்தும்
உன்னோடு கால்பதிய சொர்க்கமாய்
மாறுமென நினைத்துமனதை இழந்தேன்
உன்னையும் என்இதயத்திற்குள் அடைத்தேன்.

இன்று...
என்வாழ்வில் உன்னை இழந்தபின்பு
என்னுயிர் சொர்க்கத்திற்கும் செல்லமுடியாமல்
இம்மண்ணிலும் வாழமுடியாமல் திரிசங்கின்
உடல்போல் உயிரோடு தவித்துக்கொண்டு.

ஒன்று....
என்னோடு நீசேர்ந்து நம்வாழ்வு
மண்ணில் சொர்க்கம் ஆகட்டும்
இல்லையெனில்
உனைவிட்டு நான்பிரிந்து என்வாழ்வு
விண்ணில் சொர்க்கம் அடையட்டும்....

6 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

கலக்கலுங்க

Pinnai Ilavazhuthi said...

நண்பனே
ஆரம்பத்தில் அப்படி இப்படி என சென்றலும்
முடிவில் உன் முத்திரைரை பதித்து விட்டாய்
வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிமே தொடர்பதிவுக்கு மறந்து கூட கூப்ட மாட்டேன்னு முடிவெடுத்த சமயத்துல கடைசி பத்திகளில் நிரூபித்துவிட்டீர்கள்..
எத்தனை தொடர்பதிவென்றாலும் உங்களால் எழுத முடியுமென்று..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரஹீம்,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும் மற்றும் கருத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இளா,

மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

இல்ல சும்மா மொக்கையா எழுத வேண்டும் என்றுதான் எழுதியது... (அதற்கு மன்னிக்கவும்)

வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி...