Tuesday, May 10, 2011

அன்பு...காதல்... காமம்...



நீ!!!

அலைமகளோ
மலைமகளோ
கலைமகளோ
என்றுதெரியாது?

உன்இதயத்திற்குள் அவனை மெல்லஅடைத்து
உன்இல்லத்தின் கதவினை திறந்துவைத்திருக்கிறாய்
தென்றல்காற்றாய் உன்னை வந்துசேர்ந்திட
அவன்மனதுக்குள்ளும் இருக்கும் ஆசையையுணர்ந்து...

காற்றினைவிட நீஅவனுக்கு ஏந்திட
மென்மையானவள் என்று நிருபிக்கவும்
காற்றினையும் கையில் பிடிக்கமுடியும்
என்பதனை செயலில் செய்துகாட்டவும்

அவனிரு கரங்களில் அள்ளியெடுத்து
உன்னை அரவணைத்து சுமக்கசொல்கிறாய்
உன்செவியில் அவன்குரலில் இதமாய்
மெல்லிசை பாடலை ஒலிக்கசொல்கிறாய்...

// கையில் மிதக்கும் கனவாநீ
கை கால் முளைத்த காற்றாநீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலையநீ //

ஒருபாடல் உன்னை பார்த்து அவன்பாட
மூன்றுபாடல் அவனை பார்த்து நீபாடுகிறாய்
ஒரேமுறை பார்த்தாலே போதும் என்கிறாய் - அவன்
உன்அன்பை என்னவென்று எண்ணிவியந்து போகிறான்

// நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு // என்கிறாய்....
//ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே// என்கிறாய்
//உனக்கென நான் எனக்கென நீ... நினைக்கையில் இனிக்குதே// என்கிறாய்...
எல்லாம் கனவாக வந்துசென்றாலும் மகிழ்ச்சியென்கிறாய்...

இருவரும் பார்க்காமல் போனாலும் போகக்கூடும்
ஒருவரையொரு புரிந்துக்கொண்டது மட்டும் போதுமென்கிறாய்
ஒருமுறைகூட வாழ்வில் சந்தித்தது இல்லை
மறுமுறை வாழ்வில் சந்திப்பதைபற்றி சிந்திப்பதற்கென்கிறாய் ...

நீயொரு பெண்ணாக
அவனொரு ஆணாக
உங்கள் உணர்வுகள் - இடம்மாறிக்கொண்டு
உங்கள் மனதுக்குள்....

12 comments:

Anonymous said...

//நீ!!!
அலைமகளோ
மலைமகளோ
கலைமகளோ
என்றுதெரியாது?//

வார்த்தை விளையாஆஆஆடுது...

Anonymous said...

//உன்இதயத்திற்குள் அவனை மெல்லஅடைத்து
உன்இல்லத்தின் கதவினை திறந்துவைத்திருக்கிறாய்
தென்றல்காற்றாய் உன்னை வந்துசேர்ந்திட
அவன்மனதுக்குள்ளும் இருக்கும் ஆசையையுணர்ந்து...//



ஓகே.. அப்புறம்???

Anonymous said...

//காற்றினைவிட நீஅவனுக்கு ஏந்திட
மென்மையானவள் என்று நிருபிக்கவும்
காற்றினையும் கையில் பிடிக்கமுடியும்
என்பதனை செயலில் செய்துகாட்டவும்
// கையில் மிதக்கும் கனவாநீ
கை கால் முளைத்த காற்றாநீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலையநீ //


ஆஹா சூப்பரோ சூப்பர்..
எப்டி இப்டியெல்லாம் ஜிந்திச்ச்ச்ச்ச்சு எழுதுறீங்க??? என்னமோ போங்க வாசன்..

Anonymous said...

// நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு //
//ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே//
//உனக்கென நான் எனக்கென நீ... நினைக்கையில் இனிக்குதே//


நீங்க எழுதுன கவிதையிலயே இது தான் ரொம்ம்ம்ம்ப நல்லாயிருக்கு..

Anonymous said...

//இருவரும் பார்க்காமல் போனாலும் போகக்கூடும்
ஒருவரையொரு புரிந்துக்கொண்டது மட்டும் போதுமென்கிறாய்
ஒருமுறைகூட வாழ்வில் சந்தித்தது இல்லை
மறுமுறை வாழ்வில் சந்திப்பதைபற்றி சிந்திப்பதற்கென்கிறாய் ...//


புரியுதுஉஉஉஉஉ... ஆனா..

Anonymous said...

//நீயொரு பெண்ணாக
அவனொரு ஆணாக
உங்கள் உணர்வுகள் - இடம்மாறிக்கொண்டு
உங்கள் மனதுக்குள்....//


என்னது??? முடிஞ்சிடுச்சா???

nithubaby said...

வணக்கம் வாசன் !

வரிகள் ஒவ்வொன்றும் அருமை! எப்படி உங்களால் மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது தோழரே ! நீங்கள் எழுதும் பேனாவின் சிறப்பா அல்லது உங்கள் கை விரல்களின் கை வண்ணமா ? ?
எனக்கு அந்த ரகசியத்தை சொல்லுங்களேன்

nithubaby said...

அன்பு காதல் காமம் ..............

தலைப்பு அருமை :)

arasan said...

அண்ணே நிறைவான தலைப்பே முழு நீல கவிதை சொல்லுகிறது ,.,..

arasan said...

அண்ணே நிறைவான தலைப்பே முழு நீள கவிதை சொல்லுகிறது ,.,..

arasan said...

மிகவும் ரசித்தேன் .,.
அண்ணே ... நன்றி

Ranioye said...

nee suvasikum potum veli vara maden.. unakul vasipene..
inta padalaiyum padi irupangaka!