Thursday, September 1, 2011

கனவா? கற்பனையா?



ஆசைதீர கட்டியணைத்து தழுவுகிறேன்
அகம்மகிழ்ந்து போதுமென நினைத்து
கைகளை விடுவிக்கும் தருணம் - மீண்டும்
தீராத வாஞ்சையாக கட்டியணைக்கிறேன்...

உன்னை நான் கட்டியணைப்பது
கனவு என்பதனாலா?
இல்லை...
நான் எழுதுவதுபோல் எல்லாம்
கற்பனை என்பதனாலா?

8 comments:

Anonymous said...

எல்லாம் கற்பனை என்பதால் பிதற்றுகிறாயோ!..சகோதரா!
வேதா. இலங்காதிலகம்.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல கற்பனை.

Unknown said...

நல்ல கவிதை
அழகுடன் அமைந்துள்ளது

புலவர் சா இராமாநுசம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள குணசீலன்,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராமாநுசம்,

மிக்க நன்றி ஐயா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இலங்காதிலகம்,

மிக்க நன்றி...

நிகழ்வுகள் நினைவாய் ஆகும்
நினைவுகள் கனவாய் ஆகும்
கனவுகள் கற்பனையாய் ஆகும்
கற்பனைகள கவிதையாய் ஆகின்றன...

கதம்ப உணர்வுகள் said...

நிஜமா கனவோ கற்பனையோ....

மனதில் இருக்கும் அன்பு மட்டும் உண்மை....

அருமையான கவிதை வரிகள் வாசா...

அன்பு வாழ்த்துகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மஞ்சு அக்கா,

மிக்க நன்றி...

மனதில் அனைவர் மீது வைத்திருக்கும் அன்பு உண்மையே என்றென்றும்...

உங்கள் அன்பினை என்றும் வேண்டி...