Sunday, September 25, 2011

வார்த்தை விளையாட்டு


உனக்குள்ளும் நான்
அவளது சொல்...

எனக்குள் நீமட்டும்
இவனது சொல்...

இதயத்தின் வலி
அவளுக்கு புரியவில்லை...

என்னுள் நீமட்டுமில்லை
நீயும் ஒருவளாக
அவனது மறுசொல் - கண்ணீர்
அவளது கண்களில்.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

என்னுள் நீமட்டுமில்லை
நீயும் ஒருவளாக
அவனது மறுசொல் - கண்ணீர்
அவளது கண்களில்/

"வார்த்தை விளையாட்டு"

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

இனிய வரவிற்கும். பின்னூட்ட விளையாட்டிற்கும்...

இந்திரா said...

//எனக்குள் நீமட்டும்
இவனது சொல்...//


//என்னுள் நீமட்டுமில்லை
நீயும் ஒருவளாக
அவனது மறுசொல் - //


முன்னுக்குப் பின் முரணாக இருக்கே..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

அவள் பேசிய வார்த்தை பிரத்யோகத்தின் வலியை அவளுக்கு வெளிக்காட்டவே அவனது மறுமொழி...

முரணாக இருந்தாலும் அன்பினை உணர்த்தவே அரணாக அவன் சொல்...

// உனக்குள்ளும் நான்
அவளது சொல்...

இதயத்தின் வலி
அவளுக்கு புரியவில்லை...//

// என்னுள் நீமட்டுமில்லை
நீயும் ஒருவளாக

கண்ணீர்
அவளது கண்களில்.//