Friday, June 11, 2010

சாத்தியமோ?

பெண்ணே!
மலர்ந்த மலர்கள்
வாடியுதிருமே தவிர
மீண்டும் மொட்டுகளாக
மாறாது என்றாயே
அப்படியிருக்க...

நட்பெனும் மொட்டுகள்
காதலாய் மலர்ந்து
காதல்பூக்கள் வாடியபின்
மொட்டாய் நிலைக்க
நினைப்பது மட்டும்
எப்படி சாத்தியமாகும்?

11 comments:

க.பாலாசி said...

சாத்தியமில்லைதான்...

நல்ல கவிதைங்க வாசன்..

Anonymous said...

avalukku athu saathiyamoa..p

VELU.G said...

அருமை வாசன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் மற்றும் பாராட்டிற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

அவள் அதனை சாத்தியமக்கும் மன உறுதியுடன்... என்னமோ?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

மிக்க நன்றி...

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு வாசன் ...
நலம் தானே !
சற்று முன் சாட்டில் உங்களை பிடிக்க முயன்றேன் ...
இயல வில்லை ...
வல்லத்தில் இன்று வெகு மெதுவாக இணைய இணைப்பு ...
வருகிற கோபத்தில் அமைச்சர் ராஜாவை திட்டத்தான் தோன்றுகிறது ...
போகட்டும் ...
பின்னொரு நாள் சாட்டுகிறேன் உங்களுடன் ...

உங்களது புதிய சட்டை நன்றாக இருந்தாலும் ...
எனக்கு எழுத்துக்கள் தெளிவாக தெரிய மாட்டேன்கிறது ...
நெருப்பு நரி தான் உபயோகிக்கிறேன் ...
எனது நோவா இணைப்பில் IE சாத்தியமில்லை ...
மிக கஷ்டப்பட்டே வாசிக்க வேண்டிய நிலைமை எனது கணினியில் ...
ஏதாவது பண்ண இயலுமானால் மகிழ்வேன் ...

உங்கள் கவிதையின் கேள்வி நல்ல கேள்வி தாம் !
மலர் மலராகவே இருக்கட்டும் ...
மொட்டுகளுக்கு திரும்ப வேண்டாம் ...

உங்கள் தோழிக்கு எனது வேண்டுகோள் அது ...!

வருகிறேன் தோழர் !

அ.முத்து பிரகாஷ் said...

பவதாரிணி ... இனிமை ...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நியோ!

நலம். நலமறிய ஆவல்.

மற்றொரு இனிய நன்னாளில் இனிதாய் உரையாடுவோம்...

மிக்க மகிழ்ச்சி என் வலைதளம் பற்றிய தங்களின் கருத்திற்கு...

முயற்சிசெய்து மாற்றம் செய்கின்றேன் எளிமையான புதுச்சட்டையுடன் உலாவருவதற்கு..

என்னின் தொடர்புக்கு... http://thanjai-seenu.blogspot.com/p/blog-page.html

மிக்க நன்றி...

கமலேஷ் said...

ஒரு முடிவோட கிளம்பி இருக்கிற மாதிரி இருக்கு...
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...வாழ்த்துக்கள் தொடருங்கள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

மிக்க நன்றி நண்பா...

தங்களின் ஊக்கத்திற்கும் மற்றும் வாழ்த்திற்கும்...